Thursday, July 17, 2008

வகுப்பறையில் ஒருநாள் - தேர்வு

ஒன்பதாவது வகுப்பு, மாதாந்திர தேர்வு- சமூக அறிவியல். நமக்கு தான் இந்த பாடம் ரொம்ப புடித்த பாடமே என்று ரொம்பநல்லா படிச்சுட்டு போய் எழுத உட்க்கார்ந்தேன். ஆசிரியை எல்லோரையும் உட்க்காரவைத்து கேள்வித்தாளை விநியோகிக்க தொடங்கினார். கேள்வித்தாள் தீந்து போகவே, பாதியில் வெளியே சென்று பக்கத்து வகுப்பில் வாங்கி வந்து விநியோகித்தார்.

எனக்கும் ஒரு கேள்வித்தாள் வந்து சேர்ந்தது, நானும் பயபக்தியோடு வாங்கிவிட்டு , பரீட்சை பேப்பரில் கோடு போட்டு , முருகன் துணை எழுதி விட்டு கேள்வித்தாளை எடுத்து படித்தேன். அப்பவே நினைத்தேன் கேள்விகள் மிக கடினம் என்று.

வழக்கமாக நான் கேள்வித்தாளை ஒரு முறை புரட்டி பார்த்து சில கேள்விகளுக்கு நேரடி விடை மனப்பாடமாக இருக்கும், சில கேள்விகளுக்கு ஓரளவிற்கு தெரியும் மீதியை எப்படியோ எழுதி ஒப்பேற்றிவிடலாம், சில கேள்விகளுக்கு சுத்தமாக தெரியாது எதாவது கதை எழுதி ஒப்பேற்றவேண்டும் என்று பிரித்து வைத்து இருப்பேன்.

இந்த கேள்வித்தாள் மிக கடின வகை, எந்த கோடிட்ட இடத்தை நிரப்பு கேள்விகளுக்கும் சரியான விடை தெரியவில்லை, இரண்டு மதிப்பெண் கேள்விகள் ஏதோ தெரிந்தது போல இருந்தது, ஐந்து மதிப்பெண் கேள்விகள் சில பாதி தெரிந்தது, மீதி ஒன்றுமே தெரியாது. பத்து மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் மிக கடினம். சரி வழக்கம் போல தெரிந்ததா பாத்து எழுதிவிட்டு வருவோம் என்று எழுத தேவையான கேள்விகளை எல்லாம் குறித்து எழுத தொடங்கி விட்டு ஒண்ணுமே புரியாமல் உட்க்கார்ந்து இருந்தேன்.

எதோ நியாபகத்தில் கேள்வித்தாளை மறுபடியும் பார்த்தேன் "பகிர்" என்று இருந்தது. ஆமாம் அது பத்தாம் வகுப்பு கேள்வித்தாள். வசமாக மாடிக்கொண்டோம் என்று நினைத்து மணியை பார்த்தால் கேள்வித்தாள் குடுத்து அரை மணி ஆகி இருந்தது.பின்னர் என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்தேன், கேள்வித்தாள் மாறிவிட்டது என்று சொன்னால் அரைமணி நேரமா என்ன பண்ணின என்று கேட்டு அசிங்கமா போய்விடும். இல்லை என்றால் பத்தாவது தேர்வுக்கு ஒன்பதாவது பையன் என்ன எழுதுவது என்று தெரியவில்லை.நீண்ட நேரம் யோசித்து என்ன செய்ய என்று தெரியவில்லை, ஒரு மணி நேரம் ஆகி விட்டது.

பின்னர் தெரிந்ததை எழுதுவது கடைசியாக பேப்பரை குடுக்காமல் வந்துவிட முயற்சி செய்யலாம் என்று முடிவு, இல்லை என்றால் குடுத்து கடைசியில் திருத்தி வரும்போது அடி வாங்கி கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். என் நல்ல நேரம் கடைசியில் பேப்பர் வாங்கும்போது அது வரை இருந்த ஆசிரியை எதோ வேலையை வெளியே போய்விட புதிதாய் வந்தவர் அனைவரின் விடைத்தாளையும் ஒன்றாக வங்கி குடுக்குமாறு கூறிவிட்டார், கஷ்ட்டப்பட்டு பேப்பர் குடுக்காமல் வந்துவிட்டேன்.

பேப்பர் திருத்தி வரும்போது என் பேப்பர் மட்டும் காணமல் போய்விட அந்த ஆசிரியை வேறு வழி இல்லாமல் அந்த வகுப்பின் முதல் மதிப்பெண்ணை எனக்கும் வழங்கி விட்டார். அவர் வழங்கிய 91 மதிப்பெண்தான் நான் சமூக அறிவியலில் இதுவரை எடுத்த அதிக மதிப்பெண்

No comments: