Wednesday, July 16, 2008

குழப்பம்

கடிவாளம் இல்லாத குதிரை போல கண்டபடி ஓடுகிறது மனம், எல்லாம் நல்ல படியாக நடக்கும் போது குதூகலிக்கும் மனம் சிறிது தாமதத்திற்கும் கோபப்படுவது ஏனோ? சிறு வயதிலிருந்தே இந்த தாமதம் என்ற ஒன்று மட்டும் எப்போதும் என்னை கோபப்பட செய்கின்றது. முன்கோபி என்ற பெயரை எனக்கு சூட்ட இந்த தாமதம் ஒரு காரணி.

வாக்குறுதியை மீறும்போது தாமதம் ஏற்ப்படுகிறது, அதனால் ஒருவர் அவரது பணியில் அலட்சியமாக இருக்கிறார் இதை எதிர்ப்பவன் முன்கோபி கூலாக இருக்க கத்துக்கொள் என்றெல்லாம் எனக்கு அறிவுரை. எவனும் அலட்சியக்காரனுக்கு புத்தி சொல்ல தயாராக இல்லை, எப்படி சொல்வான் அவனும் ஒரு அலட்சியக்காரனாக இருக்கும் பட்சத்தில்.

தெரியவில்லை மகிழ்ச்சி காலங்கள் மறுபடியும் வருமோ இல்லை புயலுக்கு முன் அமைதி என்றபடி புயலடிக்குமோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்க்கை செல்கிறது. கூடவே நானும்....

இன்றிரவு என்ன செய்யலாம் என்ற கருத்திலிருந்து அடுத்த பத்து ஆண்டுகளில் என்ன செய்யலாம் என்பது வரை இந்த பத்து நிமிடத்தில் ஓடி மறைந்துள்ளது.

பிரச்சனைகளை ஆலோசிக்க துணை தேடினால் அதை அவர்கள் பிரச்சனையாக கருதுகின்றனர் பாவம் அவர்களும் என்ன செய்வார்கள்.

கடந்த வருடங்களை பார்க்கும்போது காலம் என்னுள் ஏற்ப்படுத்திய மாற்றங்கள் திகைப்பை ஏற்ப்படுத்துகின்றன, இன்பத்தை தேடி வாழ்க்கையில் இன்னும் சென்று கொண்டிருக்கும் நான் இதுவரை என்னுள் இருந்த மகிழ்ச்சியை மறந்து விட்டேன் என்று யோசிக்கவே இல்லை.

இப்போது எனக்கு என்ன தேவை???? உண்மை நேர்மை என்று கிடைக்காத பல தேவைப்படுகின்றது.... கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்று கொண்டுள்ளேன்.

No comments: