Thursday, December 18, 2008

நமது நாட்டு சுற்றுலா பாதுகாப்பானதா?

வெளிநாட்டு சுற்றுலா வாசிகளை நாம் எப்படி நடத்துகிறோம்?? இந்த கேள்வி எனக்குள் பலமுறை ஏற்பட்டது உண்டு, இரண்டு வாரங்களுக்கு முன்பு பாண்டியில் எனது அலுவலக நண்பருக்கு நடந்த திருமணத்தில் கலந்துகொள்ள சென்றேன். அலுவலகத்தில் இருந்து 8 பேர் செல்லும்படி திட்டம் அதனால் இரண்டு கார்களில் செல்ல திட்டமிட்டு கடைசி நேரத்தி எண்ணிக்கை ஆறாக குறைந்தது. மாலை கிளம்பி கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது எங்களது அலுவலக நண்பர் போனில் அழைத்தார், நாங்கள் அவர் மதியமே கிளம்பிவிட்டதாக நினைத்துக்கொண்டு இருக்கும் வேளையில் தான் மாமல்லபுரத்தில் நிற்பதாகவும் அதனால் போகும்போது கூடிசெல்லுமாறு கூறினார். இரண்டு கார்களில் வருகிறோம் என்று தெரிந்தவுடன் ஒருஉதவிகேடார், என்னுடன் இரண்டு ஜேர்மனிய நாட்டு சுற்றுலா பயணிகள் இருக்கிறார்கள் அவர்களை பாண்டியில் விட்டுவிட முடியுமா என்று கேட்டார். நமதுவண்டியில் இடம் இருகிறதே என்று சரிசொல்லிவிடோம்.

மாமல்லபுரத்தில் அவர்களை சென்று அடையும்போது மணி ஏழு. மூன்று மணிநேரமாக நிற்கும் அந்த பெண்களுக்கு பேருந்து கிடைக்கவே இல்லை பாண்டி செல்ல, அவர்களை ஏற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கும்போது அவர்களிடம் இருந்த சுமைகளை பார்த்து மலைத்து போய்விட்டோம் , இரண்டு பெரிய சுமைகளும் எப்படியும் நூறு கிலோ இருக்கும், எப்படியோ இரண்டு வண்டிகளிலும் ஏற்றி கிளம்பினோம்.

பயணத்தின்போது தெரிந்தது அவர்கள் சுற்றுலாவிற்காக இந்தியா வந்துள்ளனர், இருவரும் தனியாக வந்து மும்பையில் சந்தித்துக்கொண்டு உள்ளனர். கடந்த மூன்று மாதமாக இந்தியாவில் பல இடங்களை கடந்து தமிழ்நாடு வந்துள்ளனர். படிப்பை முடித்து கொஞ்சம் வேலைபார்த்து பணம் சம்பாதித்து இந்தியாவை பார்க்க வேண்டும் என்று வந்ததாகவும், இன்னும் இரண்டு மாதங்களில் கிளம்பு வேண்டும் என்றும்கூறினார்.

பாண்டியில் எங்கு தங்க போகிறீர்கள் என்றதற்கு இனிதான் இடம் பார்க்க வேண்டும் என்றும், பேருந்துக்கு நான்கு மணிநேரம் காத்திருந்ததால் என்ன பண என்று தெரியவில்லை என்று கூறினார், பாண்டி
செல்லவே மணி ஒன்பது, பின்னர் அவர்களை எங்கு இறக்கி விடுவது என்ற கவலை. அவர்களுக்கோ சிறிது பயம் கொள்ள தொடங்கியது பின்னர் நண்பர்கள் உதவியுடன் ஒரு தங்குமிடத்தை கண்டுபிடித்தோம். அவர்களால் அதிகம் செலவு செய்ய முடியாது மிக குறித்த அளவில் இடம் வேண்டும் என்பதால் மிக பாதுகாப்பான இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் நீண்ட தேடுதல் நடத்தி கண்டுபிடித்தோம்.

அப்போது தெரிந்தது, வெளிநாட்டினர் நமது நாட்டில் வந்து செல்ல எந்தளவுக்கு பாதுகாப்புக்கு உள்ளது என்று, பணம் இருப்பவர்கள் சரி இல்லாதவர்கள்?? எளிமையான சுற்றுலா இந்தியாவில் என்பது பாதுகாப்பானதாக இல்லையோ என்று தோன்றுகிறது.


அன்று ஒரு நாள் மட்டுமே அந்த இடமும் கிடைத்தால் வேறு வழியில்லாமல் அவர்களையே அடுத்த நாள் தேடிக்கொள்ள கூறி கிளம்பினோம், அதற்குபிறகு குறுஞ்செய்தியில் மிக கஷ்டப்பட்டு தங்குமிடத்தை தேடி கண்டுபிடித்ததாகவும் எங்களை மறுபடி தொடர்பு கொள்ள தயங்கியதாகவும் கூறினார்.


எனது ஐரோப்பிய நாட்களில் எந்த நாட்டுக்கும் எந்த பயத்துடன் சென்றது இல்லை, அங்கு சுற்றுலா பயணிகள் எந்த அளவிற்கு சுதந்திரமாக பயமின்றி செல்ல முடிகிறது என்று அனுபவித்து அறிதேன். இந்தியாவில் மட்டும் சுற்றுலாவை பிரபலப்படுதினால் எந்த அளவிற்கு வருமானம் வரும் என்பதை வெளிநாடுகளில் சுற்றுலா சென்று அங்கு உள்ள மியுசியங்களை பார்த்தவர்களுக்கு தெரியும். அவர்கள் சுற்றுலாவை எவ்வாறு பிரபலபடுதுகின்றனர், எப்படி வசதி செய்து கொடுக்கின்றனர் என்று பார்த்தால் அதில் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம்.

நேற்று அந்த நண்பர்கள் அனுப்பிய மின் மடலில் இருந்த செய்தி என்னை மிக மிக பாதித்தது. ஏன் நமது சகோதரர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தவறான நோக்கத்தில் மட்டும் அணுகி வருகின்றனர் என்று தெரியவில்லை.

அந்த மின்மடலில் இருந்த சில வரிகளை காணுங்கள்.

** when I was talking about the cultural differences. I know that there are not a lot of differences between the young, modern and educated people in India and the people in germany for example.**


**Here, often I don’t know a lot of things. By the time I made a good experience I transfer it to another situation, but the situation respectively the person is totally different. And especially the Indian men can be so different. Sometimes I feel like a touristical attraction: It would not be the first time that a group of Indian men were standing around me, eyeballing at me. Or that they were talking about how much I would cost, cause they could not imagine that I only wanted to talk to a men. But as I already said, I think between the young, modern and educated people there are often no differences between India and Germany. It’s difficult for me to explain you in english, what I really mean. I hope you understood**

** You don’t have to feel sorry about the trouble I/we faced in India. In spite of everything I like India a lot. I think I have to take it in the end with humour, though it does not feel like this in the situation. It could happen in every country**

மேற்கூறிய வரிகள் எண்ணி மிகவும் பாதித்தன, நாம் எந்த அளவிற்கு மற்றவரி மதிப்பு அளிக்கின்றோமோ அதே அளவிற்குத்தான் அவர்களிடமும் நமக்கு மரியாதையை கிடைக்கும்.

இந்த பதிவு நமது நாட்டை எந்த விதத்திலும் குறை கூறுவதற்கோ, வெளிநாட்டை உயர்த்தி சொல்லுவதர்க்கோ எந்த வித சுய தம்பட்டதிற்கோ எழுதப்பட்டது அல்ல, எந்த விதத்திலும் நமது நாடு குறைந்தது இல்லை, வந்தவர்களை வரவேற்கும் தமிழ்நாட்டில் வரவேற்புக்கும் , உபசரிப்புக்கும் எந்த பாதிப்பும் இருந்ததாக கேள்விப்பட்டது இல்லை.இருந்தாலும் சிலர் பண்ணும் தவறுகளால் மொத்த நாட்டின் பெயரும் சிதைக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

சுற்றுலாவாசிகளை (வெளிநாடு /உள்நாடு) மதிக்கவும் மரியாதை செய்யவும் கற்றுக்கொள்ளவேண்டி எழுதியுள்ளேன். காந்தி சொன்னது போல நமதுநாட்டில் பெண் தனியாக பனிரெண்டு மணிக்கு சுதந்திரமாக செல்லும்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்பது உண்மை.

இப்போது பகலிலேயே தனியாக செல்ல முடிவது இல்ல, இதில் எங்கே இரவில்...

எதாவது நடந்தாலும் நமது ஊடகங்களும் உடனே எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர்களுக்கு பணம் பெற்று தரும்படி இருந்தால் கதறிக்கொண்டு வரும் , ஒரு வாரத்திற்கு கத்துவார்கள் பின்னர் மறந்துவிடுவார்கள்.

2 comments:

Anonymous said...

Hi,

Thought provoking post.
Our people's mentality :(

At present security is a problem not only for foreigners, ourselves too...

:-)
Insurance Agent

DHANS said...

வருகைக்கு நன்றி திரு bendz

மக்கள் மனதில் மாற்றேஅம் ஏற்படும் என்பது எனது நம்பிக்கை

உண்மைதான் நமக்கே பாதுகாப்புக்கு இல்லை இங்கு அதில் மற்றவர்க்கு எங்கு அளிப்பது???