ராமன் தேடிய சீதை
எனக்கு படத்திற்கு விமர்சனம் எழுதவெல்லாம் தெரியாது அனால் இந்த படத்தை பார்த்தபோது தோன்றியவை இங்கே.
ஒரு ஆணின் பார்வையில் இருந்து பெண் பார்க்கும் படலம் மற்றும் திருமணம் பற்றிய பார்வை.
இந்த படத்தில் நிறைய இடத்தில் இந்த பெண் பார்க்கும் படலத்தை பழைய சினிமா தனமாக எடுத்துள்ளனர். போன், இணையம் என்று வந்து அனைவரும் இந்த வசதிகளை உபயோகிக்க துவங்கிய பிறகும் நேரில் சென்று பெண் பார்த்து முடிவு பண்ணுகிறோம் என்று சொல்வது கொஞ்சம் நெருடல்.
இவரிடம் இருக்கும்குறைகளை பார்ப்பதற்கு முன்னரே தெரிவித்து சம்மதம் வாங்கலாமே?
அனால் படத்தில் திருமண வயதை கடந்து பெண் கிடைக்காமல் இருக்கும் ஆண்களைப்பற்றி அவர்களின் உணர்வுகளை தெளிவாக காட்டியுள்ளார் சேரன்.
பசுபதி இன்னும் நன்றாக செய்திருக்கலாம், பாவம் சேரன் குருடன், திருடனுக்கேலாம் பெண் கிடைக்கிறது அனால் இவருக்கு கிடைக்க வில்லை.
நவ்யா நாயரை பார்க்கும் முன்னரே ஒரு காட்சியில் மணிவண்ணன் நான் வேணும் என்றால் அந்த ஆஸ்பிடல் பொண்ணுகிட்ட பேசறேன் என்பார் சேரன் வேணாம் என்று மறுத்து விடுவார்.
அப்பவே சரி என்று சொல்லி இருந்தால்படத்தில் இருபது நிமிடங்களையும் நிஜத்தில் சில லகரங்களை மிச்சம் பிடித்திருக்கலாம்.
நாயகனுக்கு வேலையே வார இறுதியில் பெண் பார்க்க போவது பஜ்ஜி எல்லாம் சாப்பிட்டுவிட்டு எனக்கு பைத்தியம் என்று சொல்வது, இப்படியே பொழுதை ஊட்டி இருக்கிறார். அப்பத்தான் அந்த பெண் இவரை வேணாம் என்று சொல்லும் அடுத்த வீட்டில் பஜ்ஜி சாப்பிடலாம். (யாரையம் இது புண்படுத்த அல்ல, பார்க்கும் பொது நண்பர்கள் அடித்த கமன்ட் )
போலீசில் அடி வாங்குவது செம சீன். மொத்தத்தில் இரண்டரை மணி நேரமும் நன்றாக சிரித்து பார்த்த படம் இது, சீரியஸ் படமாக எடுத்தாலும் நண்பர்களுடன் பார்கையில் சிரிப்பு படமாக போய்விட்டது,
இதற்கு முன்னர் பார்த்த சத்யம் படத்திற்கு இது எவ்வளவோ தேவலை. அவர் போலீசு என்று நினைத்தாலே சிரிப்பு வருது இதுல மிரட்டற இடத்துல எல்லாம் கெஞ்சிகிட்டு இருக்காபுல. உபேந்திர வரும் சீன்கள் நன்றாக இருந்தன.
தயவு செஞ்சு இனி எப்படி போலீசு கேரக்டரில் நடிக்க கூடாது என்று இந்தப்படத்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
ராமன் தேடிய சீதை- இந்த படத்திற்கு இரண்டு டிக்கட் எடுத்து அப்பா அம்மாவை பார்க்க சொல்லி அனுப்ப வேண்டும், பின்ன ஒழுங்கா இப்பவே பெண் பார்க்காமல் விட்டுவிட்ட பின்னர் இப்படித்தான் நானும் அலையனும் என்று தெரிஞ்சுக்க வேணாமா?
அனைத்து பெற்றோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் :)
Friday, October 3, 2008
Saturday, September 27, 2008
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு பதிவு
நேத்து ஒரு மொக்கை பதிவு போட்டேன், எழுத்துப்பிழை நிறைந்த அதை எனக்கே படிக்க சகிக்கலை
அலுவலகத்தில் புதிய துறைக்கு மாறியதில் இருந்து வேலை அதிகரித்துவிட்டது, பதிவிட நேரம் கிடைக்கவில்லை, அதற்குள்ளாகவே அண்ணன் திருமணம், மற்றும் சில நிகழ்ச்சிகள் என்னை பதிவுலகில் இருந்து வெளியே இருக்கும்படி அமைத்துவிட்டது. இன்றும் பெரிதாக எழுத எதுவும் இல்லை அனாலும் எனக்கு தோன்றியவைகளை எழுதப்போகின்றேன்
சென்னையில் வாகனம் இல்லாமல் ஒரு வாரம் கழிந்துவிட்டது, அமாம், அண்ணன் திருமணத்திற்காக எனது காரை ஊருக்கு கொண்டு சென்றேன், அங்கு சிறு விபத்தில் மாட்டி இப்போது வேலைக்காக நின்று கொண்டு உள்ளது, எனது RX-135 திருமணத்திற்கு கிளம்பும் முன்னரே கண்டபடி சத்தம் போட்டு நின்றுவிட்டது, இஞ்சினில் கோளாறு என்று தெரிகிறது, rebore பண்ணி சரி பண்ண வேண்டும் தற்போதைய நிதிநிலைமையில் காரை சரி செய்துவிட்டு வண்டியை சரி செய்யலாம் என்று விட்டுவிட்டேன். எந்த வாகன வசதியும் இல்லாமல் சென்னையில் வெளியே செல்வது மிக கடினம், ஆட்டோ என்ற பணம் தின்னும் இயந்திரம் சென்னையில் உள்ளது அதற்கும் கால் டாக்ஸி என்னும் இயந்திரத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. என்ன பின்னர் வருவது ரசீது கொடுத்து பணம் வாங்கும் ,முன்னர் வருவது எதுவும் குடுக்காமல் பணம் வாங்குவது. கூடிய விரைவில் எதாவது வாகனத்தை சரி செய்து விட வேண்டும்.
ஒரு வரமாக அலுவலகத்திற்கு ஒரு சொகுசான பயணம், அலுவலக பேருந்து எங்கள் வழித்தடத்திற்கு மட்டும் மாற்றி மாற்றி வந்தது, பின்னர் அந்த ஒப்பந்தக்காரர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை பத்து நாட்களாக குளிர்சாதன பேருந்தை இயக்கிக்கொண்டு உள்ளனர். சக நண்பர்கள் வயிற்றில் பொறாமை தீ எழுவது நன்றாக தெரிகிறது, இருந்தாலும் சொகுசான பயணம் மிக விரைவில், சிறுசேரியில் இருந்து வேளச்சேரிக்கு 45 நிமிடத்தில் முடிந்துவிடுகிறது.
அண்ணன் திருமணம் முடிந்துவிட்டது, அந்த திருமணத்திலேயே அடுத்த திருமணத்தை பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர் அனைவரும், குடும்பத்தில் எஞ்சி நிம்மதியாய் இருப்பது நான் மட்டுமே அதையும் விட மாட்டார்கள் போலிருக்கிறது, தைபோதைக்கு அவகாசம் கேட்டு பிழைத்து உள்ளேன். இந்த திருமணத்திலேயே செலவைப்பற்றி ஒரு அபிப்பராயம் வந்துவிட்டது, குறைந்தது 5 லட்சங்கள் இருந்தால் மட்டுமே எதுவும் முடியும் என்ற நிலை வந்துவிட்டது. திருமண செலவுப்பட்டியல் இதோ -புகைப்படம் மற்றும் video - 40000 ரூபாய், சமையல் ஆள்- 30000 மணவறை மற்றும் மற்ற அலங்காரம் 40000 மளிகை- 100000 (இது ஒரு இரவிற்கு செய்ததற்கு மட்டும்) இதுவே திருமனமாய் வைத்தால் 3 வேலைகள் செய்ய வேண்டும் இன்னும் சிலஆயிரங்கள் கூடும். போக்குவரத்து செலவு 25000 ( தங்குமிடம் , பேருந்து எல்லாம் சேர்த்து ) இதையெல்லாம் முடித்து சென்னையில் வீடு புடித்து தங்க வேண்டும் என்றால் குறைந்தது 60000 வேண்டும் வீட்டிற்க்கு அட்வான்ஸ் குடுக்க, இது இல்லாமல் மணப்பெண்ணிற்கு நகைசெய்ய புடவை எடுக்க மற்றவர்களுக்கு துணி எடுக்க என்று மிகப்பெரிய தொகை சென்று விடுகிறது. இதெல்லாம் பார்க்கையில் இன்னும் கொஞ்சம் சம்பாதித்து இதைப்பற்றி யோசிக்கலாம் என்று தோன்றுகிறது.
சமீபத்தில் பார்த்த படம் பொய் சொல்ல போறோம், நன்றாக உள்ளது, நில ஆக்கிரமிப்பு மோசடி பற்றி அழகாக நகைச்சுவையாக கூறியுள்ளனர். லகே ரகோ முன்னா பாய்க்கு அப்புறம் தற்செயலாக ஒரு இந்திப்படம் பார்க்க நேரிட்டது ROCKON இந்தியே தெரியவில்லை என்றாலும் நன்றாக புரிந்தது, ஏனோ தெரியவில்லை நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை பாதித்த ஒரு படமாக அமைந்துவிட்டது. அதில் நடித்தவர் எவெரும் எனக்கு தெரியாது, ஒருநாள் மனது மிக கனமாக இருந்தது, வீட்டில் நண்பர்கள் இந்தப்படத்திற்கு சென்றனர், கடைசி நேரத்தில் நான் ஒட்டிக்கொண்டு சென்றாலும் தனியாகத்தான் இருக்கை கிடைத்தது, இருந்தாலும் அந்த நண்பர்களுக்கு ஒரு நன்றி இப்படி ஒரு படத்தை காட்டியதற்கு.
புதுப்பேட்டைக்கு சென்றால் உதிரி பாகங்களாக ஒரு காரையே வாங்கலாம் போல, எனது காருக்கு பாகங்கள் வாங்க சென்றபோது தெரிந்தது புதுப்பேட்டையின் வீரியம், என்ன வேண்டும் என்றாலும் கிடைக்கிறது, விலை உங்கள் பேச்சு சாமர்த்தியம், எதோ பொறியியல் வல்லுனராக விற்பனை பிரிவில் இருப்பதால் பேசி இரண்டு கதவுகளை 5500 ரூபாய்க்கு வாங்க முடிந்தது, புதுசாக வாங்கினால் ஒரு கதவு 9000 ரூபாய், இந்த காரை வாங்கும்போதே சொன்னார்கள் உதிரி பாகங்கள் விலை மிக அதிகம் என்று இருந்தாலும் பாதுகாப்புக்கு கருதி வாங்கினேன், வாங்கியது குறை போகவில்லை, வண்டியை சரி செய்ய எடுத்து செல்லும்போது அங்குள்ள மெக்கானிக் சொன்னது இந்த வண்டியாக இல்லாவிடில் கண்டிப்பாக உள்ளே இருந்தவர்களுக்கு அடிபட்டிருக்கும் என்று. நன்றி எனது பியட் பாலியோக்கு இனி இதை எப்போதும் விற்கும் எண்ணம் இல்லை.
அலுவலகத்தில் புதிய துறைக்கு மாறியதில் இருந்து வேலை அதிகரித்துவிட்டது, பதிவிட நேரம் கிடைக்கவில்லை, அதற்குள்ளாகவே அண்ணன் திருமணம், மற்றும் சில நிகழ்ச்சிகள் என்னை பதிவுலகில் இருந்து வெளியே இருக்கும்படி அமைத்துவிட்டது. இன்றும் பெரிதாக எழுத எதுவும் இல்லை அனாலும் எனக்கு தோன்றியவைகளை எழுதப்போகின்றேன்
சென்னையில் வாகனம் இல்லாமல் ஒரு வாரம் கழிந்துவிட்டது, அமாம், அண்ணன் திருமணத்திற்காக எனது காரை ஊருக்கு கொண்டு சென்றேன், அங்கு சிறு விபத்தில் மாட்டி இப்போது வேலைக்காக நின்று கொண்டு உள்ளது, எனது RX-135 திருமணத்திற்கு கிளம்பும் முன்னரே கண்டபடி சத்தம் போட்டு நின்றுவிட்டது, இஞ்சினில் கோளாறு என்று தெரிகிறது, rebore பண்ணி சரி பண்ண வேண்டும் தற்போதைய நிதிநிலைமையில் காரை சரி செய்துவிட்டு வண்டியை சரி செய்யலாம் என்று விட்டுவிட்டேன். எந்த வாகன வசதியும் இல்லாமல் சென்னையில் வெளியே செல்வது மிக கடினம், ஆட்டோ என்ற பணம் தின்னும் இயந்திரம் சென்னையில் உள்ளது அதற்கும் கால் டாக்ஸி என்னும் இயந்திரத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. என்ன பின்னர் வருவது ரசீது கொடுத்து பணம் வாங்கும் ,முன்னர் வருவது எதுவும் குடுக்காமல் பணம் வாங்குவது. கூடிய விரைவில் எதாவது வாகனத்தை சரி செய்து விட வேண்டும்.
ஒரு வரமாக அலுவலகத்திற்கு ஒரு சொகுசான பயணம், அலுவலக பேருந்து எங்கள் வழித்தடத்திற்கு மட்டும் மாற்றி மாற்றி வந்தது, பின்னர் அந்த ஒப்பந்தக்காரர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை பத்து நாட்களாக குளிர்சாதன பேருந்தை இயக்கிக்கொண்டு உள்ளனர். சக நண்பர்கள் வயிற்றில் பொறாமை தீ எழுவது நன்றாக தெரிகிறது, இருந்தாலும் சொகுசான பயணம் மிக விரைவில், சிறுசேரியில் இருந்து வேளச்சேரிக்கு 45 நிமிடத்தில் முடிந்துவிடுகிறது.
அண்ணன் திருமணம் முடிந்துவிட்டது, அந்த திருமணத்திலேயே அடுத்த திருமணத்தை பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர் அனைவரும், குடும்பத்தில் எஞ்சி நிம்மதியாய் இருப்பது நான் மட்டுமே அதையும் விட மாட்டார்கள் போலிருக்கிறது, தைபோதைக்கு அவகாசம் கேட்டு பிழைத்து உள்ளேன். இந்த திருமணத்திலேயே செலவைப்பற்றி ஒரு அபிப்பராயம் வந்துவிட்டது, குறைந்தது 5 லட்சங்கள் இருந்தால் மட்டுமே எதுவும் முடியும் என்ற நிலை வந்துவிட்டது. திருமண செலவுப்பட்டியல் இதோ -புகைப்படம் மற்றும் video - 40000 ரூபாய், சமையல் ஆள்- 30000 மணவறை மற்றும் மற்ற அலங்காரம் 40000 மளிகை- 100000 (இது ஒரு இரவிற்கு செய்ததற்கு மட்டும்) இதுவே திருமனமாய் வைத்தால் 3 வேலைகள் செய்ய வேண்டும் இன்னும் சிலஆயிரங்கள் கூடும். போக்குவரத்து செலவு 25000 ( தங்குமிடம் , பேருந்து எல்லாம் சேர்த்து ) இதையெல்லாம் முடித்து சென்னையில் வீடு புடித்து தங்க வேண்டும் என்றால் குறைந்தது 60000 வேண்டும் வீட்டிற்க்கு அட்வான்ஸ் குடுக்க, இது இல்லாமல் மணப்பெண்ணிற்கு நகைசெய்ய புடவை எடுக்க மற்றவர்களுக்கு துணி எடுக்க என்று மிகப்பெரிய தொகை சென்று விடுகிறது. இதெல்லாம் பார்க்கையில் இன்னும் கொஞ்சம் சம்பாதித்து இதைப்பற்றி யோசிக்கலாம் என்று தோன்றுகிறது.
சமீபத்தில் பார்த்த படம் பொய் சொல்ல போறோம், நன்றாக உள்ளது, நில ஆக்கிரமிப்பு மோசடி பற்றி அழகாக நகைச்சுவையாக கூறியுள்ளனர். லகே ரகோ முன்னா பாய்க்கு அப்புறம் தற்செயலாக ஒரு இந்திப்படம் பார்க்க நேரிட்டது ROCKON இந்தியே தெரியவில்லை என்றாலும் நன்றாக புரிந்தது, ஏனோ தெரியவில்லை நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை பாதித்த ஒரு படமாக அமைந்துவிட்டது. அதில் நடித்தவர் எவெரும் எனக்கு தெரியாது, ஒருநாள் மனது மிக கனமாக இருந்தது, வீட்டில் நண்பர்கள் இந்தப்படத்திற்கு சென்றனர், கடைசி நேரத்தில் நான் ஒட்டிக்கொண்டு சென்றாலும் தனியாகத்தான் இருக்கை கிடைத்தது, இருந்தாலும் அந்த நண்பர்களுக்கு ஒரு நன்றி இப்படி ஒரு படத்தை காட்டியதற்கு.
புதுப்பேட்டைக்கு சென்றால் உதிரி பாகங்களாக ஒரு காரையே வாங்கலாம் போல, எனது காருக்கு பாகங்கள் வாங்க சென்றபோது தெரிந்தது புதுப்பேட்டையின் வீரியம், என்ன வேண்டும் என்றாலும் கிடைக்கிறது, விலை உங்கள் பேச்சு சாமர்த்தியம், எதோ பொறியியல் வல்லுனராக விற்பனை பிரிவில் இருப்பதால் பேசி இரண்டு கதவுகளை 5500 ரூபாய்க்கு வாங்க முடிந்தது, புதுசாக வாங்கினால் ஒரு கதவு 9000 ரூபாய், இந்த காரை வாங்கும்போதே சொன்னார்கள் உதிரி பாகங்கள் விலை மிக அதிகம் என்று இருந்தாலும் பாதுகாப்புக்கு கருதி வாங்கினேன், வாங்கியது குறை போகவில்லை, வண்டியை சரி செய்ய எடுத்து செல்லும்போது அங்குள்ள மெக்கானிக் சொன்னது இந்த வண்டியாக இல்லாவிடில் கண்டிப்பாக உள்ளே இருந்தவர்களுக்கு அடிபட்டிருக்கும் என்று. நன்றி எனது பியட் பாலியோக்கு இனி இதை எப்போதும் விற்கும் எண்ணம் இல்லை.
Friday, September 26, 2008
நீண்ட நாட்களுக்கு பிறகு
பதிவெழுதி நெடுநாட்கள் ஆகின்றன, அதனால் இன்று எப்படியும் எழுதிவிடுதல் என்று முடிவெடுத்துவிட்டேன்.
எதைப்பற்றி எழுத? என்னை பாதித்த நெருங்கிய இருவர் பற்றி எழுதலாம்...
நீங்கள் இருவரும் என் வாழ்க்கையில் எதோ ஒரு வகையில் என்னை மிக அருகில் இருந்து கவனிதுவிடீர்கள்
முதலில் நீ, என் முதல் மாற்றத்திற்கு விதிட்டவகையில் உனக்கு எப்பவுமே என்னில் தனி இடம் உண்டு, என்னை மாற்றிய காரணத்தினால் உனக்கு எப்பவுமே முன்னுரிமை குடுத்து வந்துள்ளேன் இன்னமும் குடுப்பேன் அனால் சமீப காலமாக உன்னில் தெரியும் மாற்றங்கள் என்னை கலக்கமடைய செய்கின்றன. நமக்குள்ள இடைவெளி அதிகரித்து வந்தது தெரிந்ததே ஆனாலும் இப்போது அது அடுத்தகட்டத்தை போய்விட்டது என்று நினைக்கிறேன்.
நீ என்னைப்பற்றி கவலைப்பட்ட நாட்கள் முடிந்து பல வருடங்கள் அஹின்றன, என் முடிவுகளில் பெரும்பன்ங் ஆற்றிய நீ ஏன் இப்போதெல்லாம் ஒதுங்கி செல்கிறாய்?இத்தகைய நிகழ்வுகள் கண்டிப்பாக என்னில் பி விளைவுகளை ஏற்படுத்திவிட்டன. அமாமிப்போது நானும் உன்னைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை, பெரிய முடிவுகளை உன்னில் கலந்து யோசிக்காமல் எடுக்க துவங்கிவிட்டேன். இது என்னைஒருவகயிலும் பாதிக்காது அனால் உன்னை பதித்தால் அதற்க்கு நான் போருபக மாட்டேன்.
இரண்டாவது நீ முதலில் நீ ஒன்றை புரிந்துகொள்ள், என்றும் நான் என்னை தாழ்ந்த வகையில் நினைத்த் பேசுபவர்களிடம் பேச மாட்டேன் நீ விதிவலக்கை இருந்தாய், உன் சின்ன சின்ன கோவங்கள், பிடிவாதங்கள் பிடிக்கும், என்னை அதிகம் மாரம் செய்ய தூண்டினாய் அனால் இறுதியில் சிற்சில பிடிவாதங்களால் என்னிடமுள்ள மரியாதையை இழக்கிறாய், இலங்துவிட்டை என்றே சொல்ல வேண்டும்.
சரியான சுயநலவாதியாய் இருக்கும் நீ என்னிடம் எதிர்பார்ப்பது எல்லாமே உனக்கு வேலை செய்வதுதானே? நிஜமாக நான் எதையோ இழந்து அதை மறக்குன்னிடம் வந்து கடைசியில் உன்னிடமும் என் சுயமரியாதையை இழக்க விரும்பவில்லை. இதற்க்கு நான் கோவக்காரனாய் இருந்துவிடலாம், யாவரும் வெறுக்கும் வகையில் மற்றவர்களிடமிருந்த கொஞ்ச மரியாதையையும் பெரிய புடுங்கி என்ற நினைப்பில் நான் உன்னிடம் சேர்ந்து கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை, நேற்று இருந்த கோவத்தை விட உன்னை பற்றி எழுதும்போது அதிகம் வருகின்றது.ஒரே ஒரு அறிவுரை உன் லட்சியங்கள் மிக நன்று அனால் அதை அடைய இன்னும் அதிக முயற்சி தேவை, நீ தற்போது போதும் என்று நினைக்கும் தகுதியெல்லாம் பத்து, மேலும் உயர்சிக்க வாழ்த்துக்கள்.
நான் முதலில் எழுத நினைத்த தலைப்பு நான் கோவப்பட்ட தருணங்கள் அனால் அப்போது அதை எழுத நான் யார் மீதும் கொவப்படவில்லை இப்போது எழுதும்போது இவரைப்பற்றிநினைக்கயிலேயே கோவம் வருகிறது.மன்னிக்கவும்
எதைப்பற்றி எழுத? என்னை பாதித்த நெருங்கிய இருவர் பற்றி எழுதலாம்...
நீங்கள் இருவரும் என் வாழ்க்கையில் எதோ ஒரு வகையில் என்னை மிக அருகில் இருந்து கவனிதுவிடீர்கள்
முதலில் நீ, என் முதல் மாற்றத்திற்கு விதிட்டவகையில் உனக்கு எப்பவுமே என்னில் தனி இடம் உண்டு, என்னை மாற்றிய காரணத்தினால் உனக்கு எப்பவுமே முன்னுரிமை குடுத்து வந்துள்ளேன் இன்னமும் குடுப்பேன் அனால் சமீப காலமாக உன்னில் தெரியும் மாற்றங்கள் என்னை கலக்கமடைய செய்கின்றன. நமக்குள்ள இடைவெளி அதிகரித்து வந்தது தெரிந்ததே ஆனாலும் இப்போது அது அடுத்தகட்டத்தை போய்விட்டது என்று நினைக்கிறேன்.
நீ என்னைப்பற்றி கவலைப்பட்ட நாட்கள் முடிந்து பல வருடங்கள் அஹின்றன, என் முடிவுகளில் பெரும்பன்ங் ஆற்றிய நீ ஏன் இப்போதெல்லாம் ஒதுங்கி செல்கிறாய்?இத்தகைய நிகழ்வுகள் கண்டிப்பாக என்னில் பி விளைவுகளை ஏற்படுத்திவிட்டன. அமாமிப்போது நானும் உன்னைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை, பெரிய முடிவுகளை உன்னில் கலந்து யோசிக்காமல் எடுக்க துவங்கிவிட்டேன். இது என்னைஒருவகயிலும் பாதிக்காது அனால் உன்னை பதித்தால் அதற்க்கு நான் போருபக மாட்டேன்.
இரண்டாவது நீ முதலில் நீ ஒன்றை புரிந்துகொள்ள், என்றும் நான் என்னை தாழ்ந்த வகையில் நினைத்த் பேசுபவர்களிடம் பேச மாட்டேன் நீ விதிவலக்கை இருந்தாய், உன் சின்ன சின்ன கோவங்கள், பிடிவாதங்கள் பிடிக்கும், என்னை அதிகம் மாரம் செய்ய தூண்டினாய் அனால் இறுதியில் சிற்சில பிடிவாதங்களால் என்னிடமுள்ள மரியாதையை இழக்கிறாய், இலங்துவிட்டை என்றே சொல்ல வேண்டும்.
சரியான சுயநலவாதியாய் இருக்கும் நீ என்னிடம் எதிர்பார்ப்பது எல்லாமே உனக்கு வேலை செய்வதுதானே? நிஜமாக நான் எதையோ இழந்து அதை மறக்குன்னிடம் வந்து கடைசியில் உன்னிடமும் என் சுயமரியாதையை இழக்க விரும்பவில்லை. இதற்க்கு நான் கோவக்காரனாய் இருந்துவிடலாம், யாவரும் வெறுக்கும் வகையில் மற்றவர்களிடமிருந்த கொஞ்ச மரியாதையையும் பெரிய புடுங்கி என்ற நினைப்பில் நான் உன்னிடம் சேர்ந்து கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை, நேற்று இருந்த கோவத்தை விட உன்னை பற்றி எழுதும்போது அதிகம் வருகின்றது.ஒரே ஒரு அறிவுரை உன் லட்சியங்கள் மிக நன்று அனால் அதை அடைய இன்னும் அதிக முயற்சி தேவை, நீ தற்போது போதும் என்று நினைக்கும் தகுதியெல்லாம் பத்து, மேலும் உயர்சிக்க வாழ்த்துக்கள்.
நான் முதலில் எழுத நினைத்த தலைப்பு நான் கோவப்பட்ட தருணங்கள் அனால் அப்போது அதை எழுத நான் யார் மீதும் கொவப்படவில்லை இப்போது எழுதும்போது இவரைப்பற்றிநினைக்கயிலேயே கோவம் வருகிறது.மன்னிக்கவும்
Thursday, August 14, 2008
இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்
இந்திய கால்பந்தாட்ட அணிக்கு எனது வாழ்த்துக்கள்
நேற்று நடந்த AFC challenge கோப்பைக்கான இறுதி போட்டியில் கஜகிஸ்தானை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது இந்திய கால்பந்தாட்ட அணி. எப்போதும் கிரிக்கெட் கிரிகெட் என்று அதை மட்டுமே பார்க்கும் நாம் ஏன் நமது கால்பந்தாட்ட அணியை ஆதரித்து வாழ்த்தக்கூடாது?. இந்த ஆட்டம் கடந்த வருடத்தின் மிக சிறந்த ஆட்டத்தில் ஒன்று என்று கூறப்படுகின்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய கால்பந்தாட்ட அணி. 24 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசியக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் பெற்ற நேரு கோப்பை வெற்றிக்கு பிறகு மிகப்பாரிய வெற்றி இது, வெற்றி பெற்ற அணிக்கு எனது வாழ்த்துக்கள்
குழப்பம்
எல்லோருக்கும் வணக்கம்,
வேலைப்பளு காரணமாக கடந்த இரண்டு வாரமா பதிவுலகுக்கு அப்பப்ப வந்துதான் எட்டிப்பார்க்க முடிந்தது, இன்று எப்படியாவது ஒரு பதிவு எழுதிவிட வேண்டுமென்று முடிவு செய்து எழுதுகிறேன்.என்ன எழுவது, கடந்த நாட்களில் என்னை பெரிதாக பதித்த எந்த நிகழ்வுகளும் இல்லை. இரண்டு வாரங்களில் அலுவலகத்தில் நிம்மதியாக வேலை பார்த்தேன், பழைய குழிபறிக்கும் வேலைகள், பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் புது குழுவில் எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டு உள்ளது.
மூன்று நாட்கள் விடுமுறை நாளை முதல், ஊருக்கு செல்லவில்லை, இங்கிருந்து என்ன செய்ய என்று தெரியவில்லை, அனாலும் எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். இந்த வார விடுமுறையை நல்லபடியாக கழிக்க எதுவும் அறிவுரை அல்லது வழிமுறை யாராவது கூறினால் நல்லபடியாக இருக்கும்.
நம் நாடு ஒலிம்பிக்கில் இந்திய தங்கம் வாங்கிவிட்டது அதற்காக எல்லோரும் சந்தோசப்படுகிறார்கள், எனக்கும் உள்ளூர சந்தோசமே அனாலும் இவ்வளவு மக்கள் இருந்தும் ஒரு தங்கபதக்கதிற்க்காக இப்படி அல்ப சந்தோசம் கொள்வது அருவருக்க செய்கிறது. விளையாடிற்கு அரசு என்ன செய்தது என்று கேள்வி எழும்போது அதேநேரம் நானும் என்ன செய்தோம் என்று கேள்வி வருகிறது. பள்ளியில் மாணவன் படிக்கும்போது விளையாட செல்கிறேன் என்று சொன்னால் எத்தனை பெற்றோர் அதை அனுமதிக்கின்றனர்? ஏனென்றால் விளையாட்டில் சென்றால் அதற்க்கான உள்கட்டமைப்பு வசதிகளில்லை. இப்போதெல்லாம் பள்ளியில் விளையாட்டு வகுப்பு எல்லாம் எப்படி உள்ளது என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து எனது உறவினர் பிள்ளைகள் எவரும் சிறு விளையாட்டில் கூட ஆர்வம் இல்லாமல், கணினி விளையாட்டிலும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் நேரம் செலவழிக்கின்றனர். சரியான கட்டமைப்பு வசதிகள், விளையாட்டுக்கு முன்னுரிமை, விளம்பரம் போன்றவற்றை அரசு செய்து, நாமும் அதில் பங்கு கொண்டல் இனும் இருபது வருடங்களில் பெயர் சொல்லும் அளவு முன்னேறலாம் என்று நினைக்கிறேன்.
நேரம் தவறாமை,என்னவோ தெரியவில்லை சிறிய வயதில் பள்ளியில் சொல்லிகொடுத்த நேரம் தவறாமை என்ற ஒன்றை இன்றும் கடைபிடிப்பதால் எனக்கு இன்று வரை நேரம் சரி இல்லாமல் போகின்றது. பல நட்புகளை இழக்க வேண்டி உளது. நான் மட்டுமே ஒழுங்கு என்று நான் நினைப்பதாக மற்றவர் நினைத்துக்கொளும் அளவிற்கு இருக்கின்றது. சுய ஒழுக்கம் என்ற ஒன்று நம் மக்களிடம் மக குறைந்து இருப்பதாக தெரிகின்றது. எங்கு பார்த்தாலும் நான் மட்டும் சென்றால் போதும்,நன்றாக இருந்தால் போதும், நான் மட்டும் என்று இருக்கின்றனர்.
சமீப காலமாக சமூகத்தில் பல குறைகளை காணுகின்றேன், இதனால் இது சமொகத்தின் குறைகள இல்லை எனக்குள் உள்ள குறைகள என்ற சந்தேகம் எழுகின்றது.
எதையோ எழுத வந்து எதையோ எழுதிவிட்டேன்... மறுபடியும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்
வேலைப்பளு காரணமாக கடந்த இரண்டு வாரமா பதிவுலகுக்கு அப்பப்ப வந்துதான் எட்டிப்பார்க்க முடிந்தது, இன்று எப்படியாவது ஒரு பதிவு எழுதிவிட வேண்டுமென்று முடிவு செய்து எழுதுகிறேன்.என்ன எழுவது, கடந்த நாட்களில் என்னை பெரிதாக பதித்த எந்த நிகழ்வுகளும் இல்லை. இரண்டு வாரங்களில் அலுவலகத்தில் நிம்மதியாக வேலை பார்த்தேன், பழைய குழிபறிக்கும் வேலைகள், பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் புது குழுவில் எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டு உள்ளது.
மூன்று நாட்கள் விடுமுறை நாளை முதல், ஊருக்கு செல்லவில்லை, இங்கிருந்து என்ன செய்ய என்று தெரியவில்லை, அனாலும் எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். இந்த வார விடுமுறையை நல்லபடியாக கழிக்க எதுவும் அறிவுரை அல்லது வழிமுறை யாராவது கூறினால் நல்லபடியாக இருக்கும்.
நம் நாடு ஒலிம்பிக்கில் இந்திய தங்கம் வாங்கிவிட்டது அதற்காக எல்லோரும் சந்தோசப்படுகிறார்கள், எனக்கும் உள்ளூர சந்தோசமே அனாலும் இவ்வளவு மக்கள் இருந்தும் ஒரு தங்கபதக்கதிற்க்காக இப்படி அல்ப சந்தோசம் கொள்வது அருவருக்க செய்கிறது. விளையாடிற்கு அரசு என்ன செய்தது என்று கேள்வி எழும்போது அதேநேரம் நானும் என்ன செய்தோம் என்று கேள்வி வருகிறது. பள்ளியில் மாணவன் படிக்கும்போது விளையாட செல்கிறேன் என்று சொன்னால் எத்தனை பெற்றோர் அதை அனுமதிக்கின்றனர்? ஏனென்றால் விளையாட்டில் சென்றால் அதற்க்கான உள்கட்டமைப்பு வசதிகளில்லை. இப்போதெல்லாம் பள்ளியில் விளையாட்டு வகுப்பு எல்லாம் எப்படி உள்ளது என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து எனது உறவினர் பிள்ளைகள் எவரும் சிறு விளையாட்டில் கூட ஆர்வம் இல்லாமல், கணினி விளையாட்டிலும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் நேரம் செலவழிக்கின்றனர். சரியான கட்டமைப்பு வசதிகள், விளையாட்டுக்கு முன்னுரிமை, விளம்பரம் போன்றவற்றை அரசு செய்து, நாமும் அதில் பங்கு கொண்டல் இனும் இருபது வருடங்களில் பெயர் சொல்லும் அளவு முன்னேறலாம் என்று நினைக்கிறேன்.
நேரம் தவறாமை,என்னவோ தெரியவில்லை சிறிய வயதில் பள்ளியில் சொல்லிகொடுத்த நேரம் தவறாமை என்ற ஒன்றை இன்றும் கடைபிடிப்பதால் எனக்கு இன்று வரை நேரம் சரி இல்லாமல் போகின்றது. பல நட்புகளை இழக்க வேண்டி உளது. நான் மட்டுமே ஒழுங்கு என்று நான் நினைப்பதாக மற்றவர் நினைத்துக்கொளும் அளவிற்கு இருக்கின்றது. சுய ஒழுக்கம் என்ற ஒன்று நம் மக்களிடம் மக குறைந்து இருப்பதாக தெரிகின்றது. எங்கு பார்த்தாலும் நான் மட்டும் சென்றால் போதும்,நன்றாக இருந்தால் போதும், நான் மட்டும் என்று இருக்கின்றனர்.
சமீப காலமாக சமூகத்தில் பல குறைகளை காணுகின்றேன், இதனால் இது சமொகத்தின் குறைகள இல்லை எனக்குள் உள்ள குறைகள என்ற சந்தேகம் எழுகின்றது.
எதையோ எழுத வந்து எதையோ எழுதிவிட்டேன்... மறுபடியும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்
Monday, August 4, 2008
விபத்து
நமது வலையுலக நண்பர் ஒருவர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி தப்பி வந்தது பற்றி இந்த பதிவை எழுதியுள்ளார், இன்று எப்பாடுபட்டாவது ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தபோது இந்த பதிவு கண்ணில் பட்டது. நான் எழுத இருந்த பதிவுக்கும் இந்த பதிவுக்கும் சிறிதளவு சம்பந்தம் உள்ளது.
நேற்று முன்தினம் எனது உறவினர் பையன், கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பவன் தன் நண்பனுடன் இரு சக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டு இருந்தான். இவன் பின்னால் உட்கார்ந்து சென்று கொண்டு இருக்க எதிரே வந்த மினி டோர் ஆடோ சாலையின் இடது புறம் சென்று கொண்டிருந்த இவர்களை நோக்கி வந்து எதிர்பாராத விதமாக இவர்களை இடித்து விட்டது.
இடித்த பின் வாகனத்தை விட்டு இறங்கவில்லை அந்த ஓட்டுனர், மக்கள் கூடி பார்க்கையில் அவர் மிக அதிக போதையில் இருந்துள்ளார், எனது உறவினர் பின்னால் உட்கார்ந்து சென்றுள்ளார், வண்டி ஓட்டி சென்ற பையனுக்கு இடது கையில் சதை கிழிந்துவிட்டது அனால் இவருக்கோ இடது கையில் எலும்பு முறிவு, தொடை எலும்புமுறிவு, முழங்காலுக்கு கீழே எலும்பு முறிவு. internal bleeding அதிகமாக இருந்துள்ளது, நல்ல வேளையாக விபத்து நடந்த இடமும் எனது உறவினர் வேலை செய்யும் அரசாங்க மருத்துவமனையும் அருகில் இருந்தது, முதற்கட்ட சிகிச்சை முடிந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் இரண்டு யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டு கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போதைய நிலவரம் கையில் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விட்டது, காலுக்கு சிகிச்சை செய்ய இனும் நான்கு நாட்கள் ஆகும், காலின் எலும்பு முறிவு காயத்துடன் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி தோலின் தன்மை சோதித்து விட்டு செய்ய வேண்டுமாம். பின்னர் அறுவை சிகிச்சை க்கு பின் உள்ள நாட்களில் infection ஆகாமல் பாத்துக்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட பின் அவர்க்கென ஒதுக்கப்பட்ட அறையில் உடன் வந்த உறவினர்கள் நோயாளியின் பெட்டில் ஏறிப்படுத்து விட்டனர், நாங்கள் அவர்களை அழைத்து கண்டிகையில் எங்களிடம் சண்டை, காலையில் அவரை கொண்டு வருவார்கள் அதுவரை என்ன என்று, நாங்கள் எவ்வாறு கூறியும் அவர்கள் கேட்பதாக இல்லை, பின்னர் உறவினரின் பெற்றோரை அழைத்து கூறி ஒரு வழியாக சரி செய்தோம். கடைசி வரை உடனிருந்து பார்த்துக்கொள்ள முடியாத நிலைமை எங்களுக்கு, இருந்தும் பெற்றோரிடம் கடினமாக கூறி வந்துளோம், மிக பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று. நோயாளியை பார்க்க வரும் உறவினர் தயவு செய்து இதையெல்லாம் புரிந்து கொள்ளுங்கள்.
இப்போது காவல்துறையில் புகார் செய்வது பற்றி, அந்த புகாரில் அந்த ஓட்டுனர் குடித்துவிட்டு வந்தது பற்றி ஒரு வார்த்தை இல்லை, அதை விட ஆச்சரியம் ஓட்டுனர் பெயரே மாறி இருந்ததுதான், அந்த வாகனத்தின் வசதிக்காக இவ்வாறு மாற்றி விட்டனர், இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்திற்கு விபத்து காப்பீடு இல்லை, ஒட்டிய பையனுக்கு உரிமம் இல்லை, பின்னால் உட்கார்ந்து சென்றதால் கோர்ட்டில் நட்ட ஈடு கேட்க்க வழி உள்ளது. காவல் துறையினரிடம் பின்னர் பேசியபோது தெரிந்தது ஓட்டுனர் மாற்றப்பட்டார், காரணம் அவர்க்கு உரிமம் இல்லை என்று.
குடித்து விட்டு வாகனத்தை ஓடியதால் இப்போது யாருக்கு நட்டம்? பாவம் ஒரு பையனின் ஒரு வருட வாழ்க்கை.
ஓட்டிய பையனுக்கு அடி இல்லை, பின்னால் உட்கார்ந்து சென்றவருக்குபலத்த அடி.
இடித்த வண்டியின் உரிமையாளர் நேற்று வந்து பார்த்துவிட்டு சிகிச்சைக்கு ஆகும் செலவை குடுத்து விடுகிறேன் சமாதானமாக செல்லலாம் என்றார், அவரிடம் சிகிச்சைக்கு இரண்டு லட்சங்கள் ஆகும் என்று கூறுகையில் வேறு மருத்துவமனையில் வைத்து குறைந்த செலவில் குடுக்கிறாராம் ஆனால் புகார் வேண்டாமாம். தற்ப்போது நாங்கள் புகார் குடுத்து கோர்ட் மூலமாகவே செல்ல விருப்பம் என்று கூறி விட்டோம்.
தயவு செய்து மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டதீர் நண்பர்களே, இன்றில்லை என்றாவது சிறிது நேர தவறில் எதிர்காலம் பாழாகும் வாய்ப்பு எதற்கு குடுக்க வேண்டும்.
நேற்று முன்தினம் எனது உறவினர் பையன், கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பவன் தன் நண்பனுடன் இரு சக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டு இருந்தான். இவன் பின்னால் உட்கார்ந்து சென்று கொண்டு இருக்க எதிரே வந்த மினி டோர் ஆடோ சாலையின் இடது புறம் சென்று கொண்டிருந்த இவர்களை நோக்கி வந்து எதிர்பாராத விதமாக இவர்களை இடித்து விட்டது.
இடித்த பின் வாகனத்தை விட்டு இறங்கவில்லை அந்த ஓட்டுனர், மக்கள் கூடி பார்க்கையில் அவர் மிக அதிக போதையில் இருந்துள்ளார், எனது உறவினர் பின்னால் உட்கார்ந்து சென்றுள்ளார், வண்டி ஓட்டி சென்ற பையனுக்கு இடது கையில் சதை கிழிந்துவிட்டது அனால் இவருக்கோ இடது கையில் எலும்பு முறிவு, தொடை எலும்புமுறிவு, முழங்காலுக்கு கீழே எலும்பு முறிவு. internal bleeding அதிகமாக இருந்துள்ளது, நல்ல வேளையாக விபத்து நடந்த இடமும் எனது உறவினர் வேலை செய்யும் அரசாங்க மருத்துவமனையும் அருகில் இருந்தது, முதற்கட்ட சிகிச்சை முடிந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் இரண்டு யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டு கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போதைய நிலவரம் கையில் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விட்டது, காலுக்கு சிகிச்சை செய்ய இனும் நான்கு நாட்கள் ஆகும், காலின் எலும்பு முறிவு காயத்துடன் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி தோலின் தன்மை சோதித்து விட்டு செய்ய வேண்டுமாம். பின்னர் அறுவை சிகிச்சை க்கு பின் உள்ள நாட்களில் infection ஆகாமல் பாத்துக்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட பின் அவர்க்கென ஒதுக்கப்பட்ட அறையில் உடன் வந்த உறவினர்கள் நோயாளியின் பெட்டில் ஏறிப்படுத்து விட்டனர், நாங்கள் அவர்களை அழைத்து கண்டிகையில் எங்களிடம் சண்டை, காலையில் அவரை கொண்டு வருவார்கள் அதுவரை என்ன என்று, நாங்கள் எவ்வாறு கூறியும் அவர்கள் கேட்பதாக இல்லை, பின்னர் உறவினரின் பெற்றோரை அழைத்து கூறி ஒரு வழியாக சரி செய்தோம். கடைசி வரை உடனிருந்து பார்த்துக்கொள்ள முடியாத நிலைமை எங்களுக்கு, இருந்தும் பெற்றோரிடம் கடினமாக கூறி வந்துளோம், மிக பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று. நோயாளியை பார்க்க வரும் உறவினர் தயவு செய்து இதையெல்லாம் புரிந்து கொள்ளுங்கள்.
இப்போது காவல்துறையில் புகார் செய்வது பற்றி, அந்த புகாரில் அந்த ஓட்டுனர் குடித்துவிட்டு வந்தது பற்றி ஒரு வார்த்தை இல்லை, அதை விட ஆச்சரியம் ஓட்டுனர் பெயரே மாறி இருந்ததுதான், அந்த வாகனத்தின் வசதிக்காக இவ்வாறு மாற்றி விட்டனர், இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்திற்கு விபத்து காப்பீடு இல்லை, ஒட்டிய பையனுக்கு உரிமம் இல்லை, பின்னால் உட்கார்ந்து சென்றதால் கோர்ட்டில் நட்ட ஈடு கேட்க்க வழி உள்ளது. காவல் துறையினரிடம் பின்னர் பேசியபோது தெரிந்தது ஓட்டுனர் மாற்றப்பட்டார், காரணம் அவர்க்கு உரிமம் இல்லை என்று.
குடித்து விட்டு வாகனத்தை ஓடியதால் இப்போது யாருக்கு நட்டம்? பாவம் ஒரு பையனின் ஒரு வருட வாழ்க்கை.
ஓட்டிய பையனுக்கு அடி இல்லை, பின்னால் உட்கார்ந்து சென்றவருக்குபலத்த அடி.
இடித்த வண்டியின் உரிமையாளர் நேற்று வந்து பார்த்துவிட்டு சிகிச்சைக்கு ஆகும் செலவை குடுத்து விடுகிறேன் சமாதானமாக செல்லலாம் என்றார், அவரிடம் சிகிச்சைக்கு இரண்டு லட்சங்கள் ஆகும் என்று கூறுகையில் வேறு மருத்துவமனையில் வைத்து குறைந்த செலவில் குடுக்கிறாராம் ஆனால் புகார் வேண்டாமாம். தற்ப்போது நாங்கள் புகார் குடுத்து கோர்ட் மூலமாகவே செல்ல விருப்பம் என்று கூறி விட்டோம்.
தயவு செய்து மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டதீர் நண்பர்களே, இன்றில்லை என்றாவது சிறிது நேர தவறில் எதிர்காலம் பாழாகும் வாய்ப்பு எதற்கு குடுக்க வேண்டும்.
Friday, August 1, 2008
புறக்கணிப்பின் முடிவு தோல்வியா??
புறக்கணிப்பின் முடிவு தோல்வியா??
நேற்றிரவு வீட்டுக்கு செல்ல சிறிது நேரம் ஆனது, இரவு பாத்து மணிக்கு சென்று வழக்கம் போல செய்திகள் வரும் தொலைக்காட்சியை போட்டா ஒருத்தர் எதோ மன்னிப்பு கேட்டுக்கறேன் நான் செஞ்ச தப்பு தெரிஞ்சுடுச்சு அப்படி இப்படின்னு பேசிகிட்டு இருந்தார்.
எல்லா ஆங்கில செய்தி சேனல்களும் அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் அவர் படம் பக்கத்து மாநிலத்தில் இனி தடை இல்லாமல் வெளியிடப்படும் என்று கூறினார் அனால் ஒருவர் கூட அதைப்பத்தி நம்ம ஊர்க்காரன் என்ன நினைக்கிறான் என்று கேட்டு வெளியிடவில்லை. சரி அத விடுங்க கேட்டாலும் மறப்போம் மன்னிப்போம் என்று சொல்வார்கள் நம்ம ஆளுங்க..
நம்ம கூட ஒரு நண்பன் வீட்டில் தங்கி உள்ளான், அவன் அவரின் ரசிகன், என்று நினைத்து இருந்தேன், இருந்தாலும் என் அதிருப்தியை தெரிவித்துவிட்டு அவனிடம் வாதாடி என் பக்கத்து உண்மையை கூறி.. அவர் என்ன வேண்டும் என்றாலும் கேட்கட்டும் என் பழக்கம் அவர் படங்களை பார்ப்பதில்லை.. இதுவரை எந்த படத்தையும் திரை அரங்கிலோ இல்லை தொலைக்காட்சியிலோ பார்த்து கிடையாது அவ்வபோது தொலைக்காட்சியில் போடும் சிறிது நேர காட்சிகளே போதும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள என்று கூறிவிட்டு அவன் புரிந்து கொள்வான் என்று நம்பி தூங்கினேன்.
காலையில் நேரமே எழுந்து கொள்ளும் நான் வழக்கம் போல எழுந்து அலுவலகத்துக்கு கிளம்புகையில் என்னுடன் வந்து தங்கின அலுவலக நண்பன் பற்பசையை கேட்டான். தேடினால் இல்லை, அப்போதுதான் கவனித்தேன் அந்த ரசிகன் வெகு நேரத்தில் எழுந்து குளித்துக்கொண்டு இருந்தான். அவன் இந்த நேரத்தில் எழுந்து நான் இன்றுதான் பார்க்கிறேன். வந்து கிளம்பிக்கொண்டு இருந்தவனிடம் என்னடா இன்று அலுவலகத்தில் வேலை அதிகமா என்றதற்கு சிரித்துக்கொண்டே..
"அலுவலகத்திற்கு எவன் போவான் இனிக்கு தலைவர் படம் அதன் லீவ் எடுத்துவிட்டு படம் பாக்க செல்கிறேன் என்றான்".~!@#%!~#
பதில் சொல்லாமல் புன்னகையை மட்டும் சிந்திவிட்டது வந்துவிட்டேன்.சம்பளம் வாங்கும் நாளில் இந்த பதிலை எதிர்பாக்கவில்லை...
வழக்கம் போல இதையும் படத்தை புறக்கணிப்போம் என்று இருந்த நான் கண்டிப்பாக மற்றவரிடமும் புறக்கணிக்க சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
நேற்றிரவு வீட்டுக்கு செல்ல சிறிது நேரம் ஆனது, இரவு பாத்து மணிக்கு சென்று வழக்கம் போல செய்திகள் வரும் தொலைக்காட்சியை போட்டா ஒருத்தர் எதோ மன்னிப்பு கேட்டுக்கறேன் நான் செஞ்ச தப்பு தெரிஞ்சுடுச்சு அப்படி இப்படின்னு பேசிகிட்டு இருந்தார்.
எல்லா ஆங்கில செய்தி சேனல்களும் அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் அவர் படம் பக்கத்து மாநிலத்தில் இனி தடை இல்லாமல் வெளியிடப்படும் என்று கூறினார் அனால் ஒருவர் கூட அதைப்பத்தி நம்ம ஊர்க்காரன் என்ன நினைக்கிறான் என்று கேட்டு வெளியிடவில்லை. சரி அத விடுங்க கேட்டாலும் மறப்போம் மன்னிப்போம் என்று சொல்வார்கள் நம்ம ஆளுங்க..
நம்ம கூட ஒரு நண்பன் வீட்டில் தங்கி உள்ளான், அவன் அவரின் ரசிகன், என்று நினைத்து இருந்தேன், இருந்தாலும் என் அதிருப்தியை தெரிவித்துவிட்டு அவனிடம் வாதாடி என் பக்கத்து உண்மையை கூறி.. அவர் என்ன வேண்டும் என்றாலும் கேட்கட்டும் என் பழக்கம் அவர் படங்களை பார்ப்பதில்லை.. இதுவரை எந்த படத்தையும் திரை அரங்கிலோ இல்லை தொலைக்காட்சியிலோ பார்த்து கிடையாது அவ்வபோது தொலைக்காட்சியில் போடும் சிறிது நேர காட்சிகளே போதும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள என்று கூறிவிட்டு அவன் புரிந்து கொள்வான் என்று நம்பி தூங்கினேன்.
காலையில் நேரமே எழுந்து கொள்ளும் நான் வழக்கம் போல எழுந்து அலுவலகத்துக்கு கிளம்புகையில் என்னுடன் வந்து தங்கின அலுவலக நண்பன் பற்பசையை கேட்டான். தேடினால் இல்லை, அப்போதுதான் கவனித்தேன் அந்த ரசிகன் வெகு நேரத்தில் எழுந்து குளித்துக்கொண்டு இருந்தான். அவன் இந்த நேரத்தில் எழுந்து நான் இன்றுதான் பார்க்கிறேன். வந்து கிளம்பிக்கொண்டு இருந்தவனிடம் என்னடா இன்று அலுவலகத்தில் வேலை அதிகமா என்றதற்கு சிரித்துக்கொண்டே..
"அலுவலகத்திற்கு எவன் போவான் இனிக்கு தலைவர் படம் அதன் லீவ் எடுத்துவிட்டு படம் பாக்க செல்கிறேன் என்றான்".~!@#%!~#
பதில் சொல்லாமல் புன்னகையை மட்டும் சிந்திவிட்டது வந்துவிட்டேன்.சம்பளம் வாங்கும் நாளில் இந்த பதிலை எதிர்பாக்கவில்லை...
வழக்கம் போல இதையும் படத்தை புறக்கணிப்போம் என்று இருந்த நான் கண்டிப்பாக மற்றவரிடமும் புறக்கணிக்க சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
Subscribe to:
Posts (Atom)