Wednesday, July 2, 2008

இன்றைய இளைஞனின் எண்ணங்கள்

இன்றைய இளைஞனின் எண்ணங்கள்

விலைவாசிலாம் கண்ணா பின்னாவென்று ஏறுகிறது, எப்படிடா காலத்த ஓட்டறது?

ஆபிசில வேற புது வேலைலாம் டல்லா இருக்கு, இந்த வருஷம் அப்பரைசல் எப்படியும் ஒன்னும் போட மாட்டாங்க. வேற வேலையும் சுலபமா கிடைக்க மாட்டேன்குது.

வீட்டு ஓனர் வேற வாடகைய எப்படா ஏத்தலாம்னு பாத்துகிட்டு இருக்கான்.
வயசு வேற ஆச்சு, நம்ம கூட படிச்ச பசங்கள்ளாம் கல்யாணம் பண்றாங்க, இத பாத்தாலே நமக்கும் வயசாச்சுன்னு ஒரு பீலிங்கு.

இதுல கூட இருக்கவன்லாம் வீட்ல பொண்ணு பாக்கறாங்கன்னு சொல்லி இன்னும் பெட்ரோல ஊத்தறான்.

வீட்டுல கல்யாண பேச்ச எடுக்க ஆரம்பிக்க இன்னும் டைம் இருக்கு, நமக்காக அண்ணன் என்ற ஒரு கேட் இருக்கு இன்னும் ஒரு வருஷம் டைம் கிடைக்கும்.

அதுக்குள்ள ஒரு வீடு வாங்கிடணும்னு இருந்த கனவு எல்லாம் கனவாவே போய் ரொம்ப நாள் ஆச்சு.

ஏதோ மென்பொருள் துறைல வேலை பாதவாவது ஏதாவது வேற கம்பனிக்கு ஜும்ப் பண்ணி சம்பளத்த ஏத்திக்கலாம் அதுக்கும் வழி இல்ல

கல்யாணம் பண்ணினா வீட்டுக்கு அட்வான்ஸ் குடுக்கணும் எப்படியும் ஒரு லட்சம் தேவை முதல்ல அதுக்கு சேத்து வைக்கணும்.

வீடுதான் வாங்கல நம்ம கெத்த மேயின்டின் பண்ண ஒரு கார் வாங்கி உருட்டுவோம், எப்படியும் நமக்கு யாராது பொண்ண குடுப்பாங்க என்று நம்பி.

வீட்லயே இருக்க பொண்ண வேணாம்ன்னு ஏற்கனவே முடிவு பண்ணினது வசதியா போச்சு.

எப்படியும் இதெல்லாம் சேர்க்க இரண்டு வருசமாது ஆகும் அதுக்கு இடைல யாரது நல்ல மாமனாரா கிடைச்சா செட்டில் ஆகிடலாம்.

மூணு வருசமா வேல செஞ்சு என்னாத்த சேத்து வச்சன்னு பார்த்த ஒரு மண்ணும் இல்ல, ஊதாரிக்கு அர்த்தம் இப்பதான் தெரியுது.

பேசாம கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் அகிடலாமா? அப்படியே சரின்னாலும் எவன் பொண்ணு குடுப்பான் நல்ல பேருக்கெல்லாம் எவனும் பொண்ணு குடுக்கறது இல்ல எவ்ளோ சேத்து வச்சுருக்க அதுக்குத்தான் பொண்ணு.

காதல் பண்ணலாம்னாலும் நமக்கு இருக்க நண்பர்கள் வட்டாரம் நம்மள முதல்ல வெளிய விடனும் அதும் நடக்காது.

ஐயோ எனக்கும் பொறுப்பு வந்துடுச்சு போலருக்கு, இப்படிலாம் பதிவு எழுதறோம்.

அதான பார்த்தேன், இத எழுதும்போதே நண்பன் ஒருத்தன் வெளிய போகனும்னு கடன் கேட்க்கறான் குடுத்து குடுத்து சிவந்த கையால ஒரு ஆயிரத்த டிரான்ஸ்பர் பண்ணிடோம்ல, திரும்பி வரதுன்னு தெரிஞ்சும் இப்படி பண்றதுல ஒரு திருப்தி.

டேய் போதும்டா இந்த மொக்க பதிவு, செய்க்கிரம் போய் கொட்டிக்கோ சாப்பாடு தீந்துடும் என்று மனச்சாட்சி சொல்றதால விடறேன்.
இந்த கால இளைஞன் என்னலாம் யோசிக்கறான் பாருங்க.

இதுல வஞ்ச புகழ்ச்சி அணி எல்லாம் இல்ல, அங்கங்க தற்புகழ்ச்சி மட்டுமே இருக்கும். படிப்போம் மறப்போம்.