Wednesday, March 3, 2010

எனக்காக நானே

இன்று எழுதுவதாக முடிவு இல்லை ஆனால் இன்றுடன் என்னில் எதோ ஒரு மாற்றம், இதை பதிவு  செய்யவே ஒரு பதிவு. பதினைந்து நாட்கள் விடுமுறையில் நாளை கடைசி நாள், எதுவும் செய்யாமலேயே கழிந்துவிடுமோ என்று அஞ்சிய எனக்கு கடைசி நாளில் எதோ ஒரு மாற்றம் ஆனால் நல்லதொரு மாற்றம் என மனது சொல்கிறது.

காலையில் இருந்து பல வித எண்ணங்கள் மனதில், எல்லாவற்றிலும் எனது தோல்விகளே நினைவில் நின்றாலும் வெற்றி என்பது வெகு தூரம் இல்லை என தோன்றியது அல்லது தோன்ற வைத்தது.  

நாளை ( எழுதும்போது இன்று ) எடுத்துள்ள முடிவுகளை செயல்படுத்துவேனா  என்பதை விரைவில் தெரிவிக்கிறேன்.  என்னுடைய சோம்பேறித்தனத்தை இன்றுடன் முடித்து வைத்து மாற்றத்தை துவக்கிவைத்த விடுமுறையை வாழ்த்துகிறேன்.

எனக்காக நானே 

No comments: