Wednesday, April 29, 2009

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.-2

பகுதி 1
மனதுக்குள் ஒரு சந்தோஷ நெருப்பூற்று வழிந்து ஓடியது . யோசித்தான், பதில் அனுப்பலாமா? வேண்டாமா?

அனுப்பினா வழிகிறான் என்று நினைத்துக்கொள்வாளோ? அனுப்பனும் என்று மனசு சொல்லுது, வேணாம் என்று அறிவு சொல்லுது எத கேக்கறதுன்னு தெரியாம முழித்தான்.

பதில் அனுப்பலாம் என்றாலும் என்ன அனுப்புவது, மொக்கைய அனுப்பவும்கூடாது. forward msg அனுப்பலாம் என்றாலும் இவன்கிட்ட அப்படி ஒரு sms இருக்கவே இருக்காது. forward msg அனுப்பி பழக்கம் இருந்தாலும் எதாவது ஒன்னு ரெண்டு இவனுக்கும் வரும்.

நெகு நேரம் sms டைப் செய்து அழித்து என்று யோசித்தான். கொஞ்ச வருஷம் முன்னாடிலாம் லவ் லெட்டர் எழுதுவது மாதிரி சினிமால காட்டும்போது ஒரே குப்பையா நாயகனை சுத்தி கிடக்கும், நல்ல வேலை cellphone இருக்கறதால பேப்பர் செலவு மிச்சம் என்று நினைத்துக்கொண்டான்.

ஒரு வழியா 'dis s nt the 1st time im getting ths kinda trt msg' னு அனுப்பி வச்சான். அனுப்பிச்சுட்டு ஐயோ அப்ப நமக்கு நிறைய பொண்ணுங்க பிரண்ட்ஸ் இருக்காங்க என்று நெனச்சுகிட்டா? என்று நினைத்து கடுப்பானான்.எதையுமே உறுப்படியா பண்ணாதடா என்று மனதுக்குள் திட்டிக்கொண்டான்.


அவன் அனுப்பிய குறுஞ்செய்தி அவளை கோபப்படுத்தியது.அவள் கேள்விப்பட்டவரை அவன் ஒரு விதமான சீரியஸ் டைப் என்று. இவன் என்னடா என்றால் நம்ம நக்கலடிக்கறான் என்று நினைத்து. ஆமா இந்த சுதா எத்தன தடவ அவனுக்கு treat தரேன்னு சொல்லி ஏமாத்தி இருக்கா , இவகூட இருக்க நம்ம எப்படி அவன் ஒழுங்கா நெனைப்பான் என்று நினைத்தாள். அடுத்த வாரம் கண்டிப்பா treat குடுக்கணும் என்றும் நினைத்தாள்.

ths s d 1st time im sendng dis kinda msg என்று பதில் வந்தது, கதிருக்கு ஏண்டா இப்படி அனுப்பினோம் பாரு இப்ப அவ நாம நெனச்ச மாதிரியே நினைத்துருக்கா என்று கடுப்பானான்.

sry i jus kiddng, i knw am gonna get a gr8 tr8 :) but its true wat i sent, even u can chk with ur frn என்று பதில் அனுப்பினான்,நாளைக்கு சுதாக்கு தெரிந்தாலும் தப்பித்து கொள்ளலாம் என்று நினைத்து.

its k but its tru frm dis side 2, also nthg 2 confrm coz i alrdy knw the fact என்று பதில் வந்தது,

ஆக நம்ம பத்தி தெரிஞ்சு வச்சுதான் இருருக்கா போல. மனதுக்குள் ஒரு இசை நிகழ்ச்சியே நடத்தி முடித்திருந்தான், ஆகா நானும் ஒரு பொண்ணுக்கு SMS அனுப்பிட்டு இருக்கேன் என்று மகிழ்ச்சியாய் இருந்தான். முழித்துக்கொண்டே கனவுகண்டான், நண்பர்கள் அனைவரும் சாப்பிட போவது போலவும், அவளும் அவனும் நன்றாக நெருங்கிய நண்பர்களை இருப்பது போலவும், இன்னும் என்ன என்ன கனவுகளோ. அப்படியே தூங்கியும் போனான்.

k gud ngt nd thx 4 d helps again என்று ஒரு குறுஞ்செய்தியை பாத்துவிட்டு ஐயோ gud night சொல்லாம கூட தூங்கிட்டேனே என்று வருந்தினான். உனக்கு பொண்ணுங்க கூட பேசவே தெரியல அப்புறம் எப்படிடா நீ மத்தவங்கள மாதிரி இருக்கா போற, எப்பயும் பொரம பட்டுகிட்டே இருக்கத்தான் லாயக்கு என்று அவனை அவனே திட்டிக்கொண்டான்.

காலங்காத்தால msg அனுப்பினா எதும் நெனசுக்குவா அப்புறம் office போயிட்டு அனுப்பலாம் என்று நினைத்து கிளம்பினான்.

அலுவலகத்தில் அன்று ஏனோ தெரியவில்லை சுதாவை காபி குடிக்க கூப்பிட்டன் அதிசயமாய். அவளிடம் என்ன பேசுவது தெரியவில்லை, எதோ பேசிக்கொண்டு இருந்துவிட்டு, பின்னர் ஒழுங்கா உன் பிரண்டிடம் treat வாங்கி கொடுத்துடு, நாங்க சும்மாலாம் உதவி செய்ய மாட்டோம் என்று கூறினான்.

உனக்கு வேணும்னா நீ போய் கேட்டுக்க என்று கோவமாய் சொல்லிவிட்டு சென்ற சுதாவை பார்த்து அதிர்ந்து நின்றான். என்ன ஆச்சு நேத்து msg பண்ணினது இவளுக்கு புடிக்கலையோ? இல்ல இவட்ட சொல்லலைனு கோவம் வந்துடுச்சா என்று நினைத்து குழம்பினான்.
கூப்பிட்டான் இந்த பொண்ணுங்களே இப்படித்தான் இவங்க கிட்ட மட்டும் தான் பேசணும் நு நெனைப்பாங்க அனா இவங்க மட்டும் எல்லோரிடமும் பேசுவாங்களாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கைக்கு வந்தான்.

தொடரும்...

2 comments:

Karthik said...

ஹா..ஹா. செம செம இன்ட்ரெஸ்டிங்கா இருக்கே! ஹீரோ பயங்கரமான இன்ட்ரெஸ்டிங் கேரக்டர் போல?!
:)

DHANS said...

நன்றி, பெருசா எல்லாம் இன்ட்ரெஸ்டிங் காரக்டர் இல்ல.... மொக்கை காரக்டர்தான் போக போக புரியும்