Monday, June 9, 2008

பொறியியல் முதல் வருடம்,விடுதியின் முதல் நாள்

பொறியியல் முதல் வருடம், விடுதியின் முதல் நாள் காப்பாளரிடம் சென்று கையொப்பம் இட முயலும்போது அந்த கேள்வி என்னை தொட்டது, அப்பா எங்கே??

நான் அவர் வரலீங்க என்று சொல்ல அதற்கு அவர் அப்பா வரலியா? அப்போ ரூம் ஒதுக்க முடியாதுனு குண்ட தூக்கி போட்டார்.

கிளம்பும்போது எங்க அப்பாட்ட சொன்னேன் விடுதி வரை வந்து விட்டுட்டு போங்க னு, அவர்தான் இந்த பஸ் தான் காலேஜ்கு நேரா போகுதே அப்புறம் எதுக்கு நான் வரணும்னு கேட்டுட்டு ஈரோட்டிலேயே இறங்கி என்னை மட்டும் பஸ் எத்தி விட்டுட்டார்.

சரி அத விடுங்க, நாம சும்மா இருப்பமா காப்பாளரிடம் ரூம்லாம் ஒதுக்கியாச்சு கையெழுத்து மட்டும் போட்டு ரூம்க்கு போனா போதும்னு அன்னிக்கே சொன்னாங்கனு சொனேன். அவர் என்னை ஒரு மாதிரியா பார்த்தார், பையன விடுதில கொண்டு வந்து விட கூட உங்க அப்பா வர மாட்டாரான்னு கேட்க, எனக்கு கோவம். சார் என்ன சேர்க்க அவர் தான் வந்தார், சேர்க்கைக்கு அப்புறம் மூன்று நாட்கள் விடுமுறை அதனால் நான்தான் வீட்டுக்கு சென்று இன்னிக்கு வரலாம்னு சொன்னேன். இன்னிக்கும் நான் தான் எங்க அப்பாட்ட வர வேணாம்னு சொன்னேன். இதுல்ல என்னங்க தப்பு என்று கேட்டேன். அப்பத்தான் சுற்றும் முற்றும் பார்த்தேன், எல்லா பசங்களும் அவங்க அப்பா,அம்மா சில பேர் சுற்றம் சூழ வந்திருந்தார்கள்.

விடுதி காப்பாளர் எனக்கு தெரிஞ்சு விடுதிக்கு வந்து சேர தனியா வந்த முதல் ஆல் நீதான் என்று ஒரு பாபட்ட குடுத்தார், அது கூட நீ ரொம்ப பேசற, mechanical department தான, வா பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு அறை ஒதுக்கி குடுத்தார். "அறை எண் A15 இல் நான்". எனக்கு மின்னலே பார்த்த effect இல் மெக்கானிக்கல் டிப்பார்ட்மென்ட் என்பது ஒரு கனவு, ஏனென்றால் நாங்க எல்லாம் பள்ளிக்கூடத்திலேயே அப்படிதான் இருந்தோம்.

அறைக்குள் வந்தாச்சு இனி மற்ற 3 பேர் வரணும், எனக்குன்னு ஒரு கட்டிலையும், பொருட்கள் வைக்க அலமாரியையும் பிடித்துக்கொண்டு மற்றவர்களை எதிர்நோக்கி இருந்தேன். சிறிது நேரத்தில் ஒரு தந்தையும் மகனும் வந்தார்கள். வந்தவுடன் அவர்களாக பேசிக்கொண்டனர்,கட்டிலை அப்டி நகர்த்திவிடலாம், மேசையை சன்னலுக்கு அருகில் போட்டால் வெளிச்சம் நல்லா வரும் படிக்க என்றெல்லாம். எனக்கு தூக்கி வாரி போட்டது, சிக்கினோம்டா நல்லா என்று நினைத்தேன். சிறிது நேரத்தி அந்த தந்தை ரூம் க்கு இன்னும் பூட்டு வாங்க வில்லை என தெரிந்து 4 சாவியுடன் கூடிய பூட்டை வாங்க சென்றார். பின் அவனிடம் பேச்சு குடுத்தேன், பெயர் ஹரிஹரன், அவன் இந்த பேச்செல்லாம் எங்க அப்பாவிற்காக கண்டுக்காதீர்கள் என்று சொல்லி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.

சிறிது நேரத்தில் அடுத்த நபர் வந்தார்,பெயர் விஜயகுமார் (பின்னாளில் தல என்று அழைக்கப்பட்டார், காரணம் அவர் ஊர் பெட்டவாய்தலை, நீங்கள் வேற காரணம் எதிர்பார்த்தால் நான் பொறுப்பல்ல) அவருடன் அவர் அண்ணன். சில நேரத்தில் அவர்கள் இருவரும் கிளம்பிவிட, ஹரி அப்பாவும் கிளம்பிவிட (ஹரிக்கு பின்னாளில் மாமா என்று பெயர் வந்தது ) நாங்கள் இரவு சாபத்தை (அதாங்க சாப்பாட்டை) முடித்துக்கொண்டு காலையில் எப்போ எழுந்துகொள்ளலாம் என்று பேசினோம். ஹரி ஒரு 6.30 to 7 மணிக்கு எழுந்து கிளம்பலாம் என்று பேசி அலாரம் வைத்து தூங்கினோம். திடீரென்று சத்தம் வெளியே கேட்டது, எல்லோரும் நன்றாக பேசுவதும் நடப்பதும் என்று, சிறிது நேரத்தில் ஹரியும் எழுந்து விட்டான், மணியை பார்த்தால் 6.30 அலாரமும் அடிக்கவே எழுந்து சில நேரம் உட்கார்ந்து பின் கிளம்புவதர்க்கு செல்ல கதவை திறந்தால் வெளியே பெரிய அதிர்ச்சி. ஆமாம் நாங்கள் மட்டுமே அப்போது தூங்கி எழுந்து வெளியே வர நாங்கள் பார்த்த அனைவரும் எழுந்து கிளம்பி கையில் நோட்டு புத்தகத்துடன் கிளம்பி விட்டனர், அதுமட்டும் இல்லாமல் அவர்கள் எங்களை பார்த்த பார்வை, ஐயோ மிக கேவலமான பார்வை. என்ன இருந்தாலும் முதலாம் அண்டு மாணவர் என்பதால் அனைவரையும் ஒன்றாக மட்டுமே அழைத்து செல்ல வேண்டும் என்பது காவலாளிக்கு விடப்பட்ட கட்டளை. நாங்கள் கிளம்பி வரும் வரை அவர்கள் அனைவரும் காத்திருந்தனர் (எங்களுக்காக இல்லை அனைவரும் 8 மணிக்கு மட்டுமே கிளம்பி வெளியே செல்ல வேண்டும் என்பது அங்க விதி )

இவ்வாறாக எனது முதல் நாள் ஆரம்பித்தது.. இன்னும் நிறைய சொல்ல இருக்கிறது, மெதுவாக அதையெல்லாம் பார்க்கலாம்.

2 comments:

ரூபஸ் said...

சொல்லுங்க.. அதுக்கப்புறம்... சீனியர்ஸ் உங்க கிட்ட பொண்ணுங்களோட பயோடேட்டா வாங்கிட்டு வரச்சொல்லியிருப்பாங்களே!!!!

DHANS said...

//உங்க கிட்ட பொண்ணுங்களோட பயோடேட்டா வாங்கிட்டு வரச்சொல்லியிருப்பாங்களே//

அதெல்லாம் இல்லீங்க, அந்த மாதிரி ராக்கிங் என் வாழ்கைல நடக்கலங்க, நம்ம நட்பு ஒன்னு அங்க இரண்டாம் ஆண்டு படிச்சுது, நம்ம நட்புன்னு சொன்னாலே புரிஞ்சுக்கணும் அது அங்க எப்படி இருந்திருக்கும்னு. இத அடுத்த பதிவுல சொல்றேன்.