Wednesday, June 11, 2008

வகுப்பறையில் ஒரு நாள்

எட்டாவது படிக்கையில் நடந்தது இது, அதுவரை தமிழ் வழி கல்வி கற்ற என்னை ஆங்கில "வலி" (அப்போ அப்படித்தான் தோன்றியது எனக்கு) கல்விக்கு எட்டாவது படிக்கும்போது மாற்றினார் என் தந்தை.

பள்ளிக்கு வந்து ஒரு வாரம் இருக்கும், ஒரே பள்ளியில் மாற்றப்பட்டதால் பெரிதாக எதுவும் வருத்தமில்லை நண்பர்களை பிரிந்து விடுமே என்று (அதான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓடி விடுவேனே பழைய வகுப்பு தோழர்களை பார்க்க)

அன்று ஒரு நாள் புவியியல் வகுப்பு, சுலோக்ஷனா டீச்சர் )இன்று வரை அவங்கள எனக்கு பிடிக்கவில்லை), பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்கள், நான் ஏதும் புரியாமல் பக்கத்தில் இருந்தவனை பார்க்க (அவனும் என்னைப்போல தமிழ் டு ஆங்கிலம் ) அவனும் என்னைப்பார்த்து முழித்தான், (டீச்சர் எப்போதுமே ஆங்கிலத்தில் தான் வகுப்பு எடுப்பார்கலாம்!!! ) பின்னர் அவன் ஒரு நோட்டை எடுத்து புள்ளி வைத்து கட்டம் போட்டு initial போட்டு விளையடுவோமே அது விளையாடலாம் என்றான்.

நாங்களும் சுவாரசியமாக விளையாட திடீரென்று அந்த டீச்சர் எங்கள் இருவரையும் எழுப்பி நிறுத்தினார், நன்றாக மாட்டிக்கொண்டோம் என்று நினைத்து பயந்து போனோம், அது போல நீங்கள் நியூ அட்மிசன் தான என்று கேட்க தலை ஆட்டினோம். பின்னர் அவர் மற்ற மாணவர்களை பார்த்து கூறியது இதுதான் "இங்க பாருங்க இந்த புது பசங்கல, நான் பாடம் நடத்தும்போது எப்படி நோட்ஸ் எடுக்கிறாங்க நீங்களும் இவ்ளோ வருசமா படிக்கறீங்க எவனாது இப்படி இருந்துருகீங்களா"

எங்களுக்கு ஒரே ஷாக், அனாலும் அப்படியே மைன்டைன் பண்ணிட்டோம்ல... பசங்க அப்ப எங்க கூட அவ்வளவா பேச மாட்டாங்க ஆனா எங்கள ஒரு மாதிரியா பார்த்து சிரிச்சாங்க பாருங்க அதிலிருந்து எங்களுக்கு அந்த வகுப்பில் இருந்த தனிமை குறைந்தது...

வகுப்பறையில் ஒரு நாள் -தொடரும்

No comments: