Tuesday, June 3, 2008

என்னோட விடுமுறை ரொம்ப நல்லா முடிந்தது பாகம் II

மோகன் அண்ணா தான் முதலில் வண்டியை ஓட்டினார் . மேட்டுப்பாளையம் வரையில் நிறுத்தாமல் வந்து அங்க நிறுத்தி ஒரு டி அப்புறம் ஒரு பப்ஸ் வாங்கி குடுத்தார்கள். அப்புறம் மாமா வண்டிய எடுத்தார். நல்ல தான் ஓட்டுகிறார் அனாலும் சில சமயம் எனக்கு பயமா இருந்தது. அப்படி இப்படின்னு நைட் 8 மணிக்கு கூடலூர் வந்து சேர்ந்தோம். சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் மைசூர் போவதான திட்டம். போகும் வழியில் முதுமலை வழியாக போவதால் காட்டு விலங்குகள் இருக்கக்கூடும் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காலையில் கிளம்பினோம், அண்ணா வரவில்லை அவர்க்கு அங்கு அரசாங்க மருத்துவமனையில் பழைய வேலைகள் முடிக்க பட வேண்டி இருந்ததாம். போகும் பொழுது ஒற்றை யானை நின்று கொண்டு எல்லோரையும் மிரட்டி கொண்டு இருந்தது அனால் யாரும் அதற்கு பயப்படுவது போல் இல்லை. அப்புறம் கொஞ்சம் மான் மயில் எல்லாம் அங்கங்கு இருந்தது. முதலில் மைசூர் என்றவுடன் பார்ப்பதற்கு நிறைய இடம் உள்ளது போலும் என நினைத்தேன். சாமுண்டீஸ்வரி கோவில்னு சொன்னாங்க அங்க போனா வெயில் காச்சி எடுத்து அதையும் மீறி மாமா கோவில் உள்ள போகணும்னு அன்பு கட்டளை இட்டதால போய்ட்டு தெரிச்சு ஓடி வந்தேன். நமக்கு இந்த கூட்டமா இருக்கிற கோவில்லாம் புடிக்காது அதனாலேயே இன்னும் திருப்பதி போனது இல்லைனா பாத்துக்கங்க, அப்படிப்பட்ட என்ன இங்க இழுத்து வந்துட்டு அடுத்து அரண்மனை போலாம் னு சொன்னாங்க. அங்க போன கேமரா எடுத்து போக முடியாதுன்னு 10 ரூபாய் வாங்கி புடிங்கி வச்சுகிடாங்க. அரண்மனை நல்லாத்தான் இருந்துச்சு. அந்த காலத்துல நல்லாத்தான் வாழ்ந்துருக்கார் அந்த ராஜா. அத்தன ரூம் பாவம் வீட்ட பூடிகிட்டு ஊருக்கு போலம்னா ஒரு வாரத்துக்கு முன்னாடியே எல்லா ரூமையும் பூட்டினாதான் கிளம்ப முடியும் போல. அதும் அங்கங்க ஒரு விநாயகர் சிலை வச்சு அதுக்கும் ஒரு உண்டியல் வச்சுருக்காங்க. அது ராஜா வேலையா இல்ல அங்க வேலை பாக்கற ஆளுங்க வேலையா தெரியல. உள்ள ஒரு காடும் காட்டை சேர்ந்த மிருகங்களும் இருக்குங்க....

அப்புறம் கிளம்பி பிருந்தாவன் கார்டன்னு சொன்ன இடத்துக்கு போனா கேமரா கட்டணம் 50 வாங்கி அனுப்பினாங்க. எதுக்குடா உள்ள வந்தோம்னு சொல்ற அளவுக்கு நிலைமை. அடிச்சு புடிச்சு கிளம்பி வந்து முதுமலை போலாம்னு வந்த 5 மணியோட உள்ள ride முடிஞ்சுடுச்சாம். அந்த ride போய்ட்டு வந்ததுல ஒரு அம்மா யானை குட்டினு சொல்லி எல்லோரும் ஒன்னு பார்த்தோம் கடைசில அத காட்டு பன்னினு சொல்லிட்டாங்க அனா அது யானை குட்டி மாதிரி தான் இருந்துச்சுன்னு புலம்பிகிட்டே போச்சு..

அடுத்த நாள் காலைல முதுமலை ride. போய் ஒரு மணி நேரம் வெயிட் பண்ணி போனா ஒண்ணும் காணும், கடைசில பழக்க படுத்தின யானைய காட்டுகுள்ள கூட்டி போய் நிக்க வச்சுருந்தாங்க அனாலும் அதுல ஒரு தப்பு பண்ணிட்டாங்க நம்ம வனத்துறை அதிகாரிகள்.கழுத்துள்ள கட்டின மணிய அவிழ்க்க மறந்துட்டாங்க...

போதும் னு சொல்லி கிளம்பி வந்து அண்ணாவை கூட்டிகிட்டு ஊட்டி கிளம்பியாச்சு..

இனிதான் நம்ம சனி இன்னும் விளையாட ஆரம்பிச்சார்... அது அப்புறம்....

No comments: