Tuesday, June 24, 2008

இரண்டாம் வகுப்பு "அ" பிரிவு,

இரண்டாம் வகுப்பு "அ" பிரிவு,

வகுப்பில் நன்றாக படிக்க கூடிய பையனில் அவனும் ஒருவன், ஏனோ தெரியவில்லை அவனில் ஒரு இனம்புரியா சோகம் இருந்தாலும் அந்த சோகத்தை மறக்கடிக்க செய்வது அவன் வகுப்பு தோழர்கள் மட்டுமே. வகுப்பறைகள் மூன்றாவது விளையாட்டு மைதானத்தை சுற்றி உள்ள இடத்தில் மாற்றப்பட்டது. அவனுக்கும் அந்த மாற்றம் தேவைப்பட்டது. இந்த மாற்றம் அவனில்லும் எதோ ஒரு மாற்றத்தை தூண்டிவிட்டது.

வகுப்பில் ஒரு நாள், மாணவர் அனைவரும் விளையாட சென்றுவிட்டு வந்திருந்தனர், உடன் படிக்கும் மாணவன் ஒருவன் வந்து அவனுடைய ஒரு புத்தகத்தை எடுத்தான், அட்டை கிழிந்து இருந்தது, அந்த அட்டை நேற்றுத்தான் போடப்பட்டது. எப்படி கிழிந்தது என்று தெரியவில்லை, அவன் அழுதுகொண்டே நம்ம ஹீரோ விடம் வந்தான், ஏனென்றால் வகுப்பில் அப்போது வேறு யாரும் இல்லை, அவர்கள் உள்ளே வரும்போதுதான் மற்றொரு மாணவன் வெளியே சென்றான்.

அந்த மற்றொருவன் தான் இப்போது வில்லன், ஏனென்றால் அவனுக்கு அப்போதே ஒரு வன்முறை எண்ணம் இயற்கையாக அமைந்து இருந்தது, சரியாக படிக்க மாட்டான், அடிக்கடி டீச்சரிடம் அடி வாங்குவன் இது போதாதா அவனுக்கு ரவுடி பட்டம்கட்ட??

அட்டை கிழிந்த மாணவனுக்கு ரவுடி மீது சந்தேகம், இப்போது நம்ம ஹீரோ உதவிக்கு வருகிறார், "டேய் நான் பார்தேண்ட அவன்தான் உன் அட்டையை கிழித்தது",

"எப்படா பார்த்த?" இது அட்டை கிழிந்த மாணவன், நம்ம விளையாட போனப்ப நான்தான் கடசியா வந்தேன்ல அப்ப அவன் உன் பைய எடுத்து பாத்துகிட்டு இருந்தான், நான் என்னனு எட்டி பார்த்தா உன் நோட்டு அட்டைய கிழிச்சு உள்ள வச்சான். மனதினுள் இதை அவன் நம்பிவிட்டால் நமது நெருங்கிய நண்பன் ஆகிவிடுவான் என்ற திட்டத்துடன் தன் வாழ்வின் முதல் பொய்யை சொல்ல துவங்கினான்.

அட்டை கிழிந்த மாணவன் ஏற்கனவே சந்தேகத்தில் இருந்தவன் இப்போது அதில் வேறு பெட்ரோல் ஊற்றிவிட நேராக டீச்சரிடம் கொண்டு சென்றான். நம்ம ஹீரோ சாட்சி குடுக்க, குற்றவாளி விசாரிக்கப்பட்டான். "டீச்சர் நான் ஏதும் பண்ல, எனக்கு ஏதும் தெரியாது" என்றான். அப்ப எதுக்கு கடசியா வெளிய போன, என்ன பண்ணின வகுப்புக்கு உள்ள? இது டீச்சர். "இல்ல டீச்சர் நான் ஏதும் விளையாட போகல, என்ன யாரும் சேத்துக்கல அதான் வகுப்பில் உட்க்கார்ந்து இருந்தேன்" இது அவன்.

இப்படி பண்ணின எவன் விளையாட சேத்துப்பான்?? டேய் உண்மைய சொல்லு யார் இது பண்ணினா? இவனா நல்ல தெரியுமா ??? டீச்சர் கேள்வி கேட்க்க, நம்ம ஹீரோ இவன்தான் டீச்சர் நான் பாத்தேன் இவன் அட்டைய கிழிக்கும்போது. சொல்லும்போது நம்ம ஹீரோ மனதில் அயிரம்கேள்விகள், தவறு என்று தெரிந்து செய்யும் ஓவொன்றும் அப்படி வலிக்கும் என்று புரிந்து கொண்டான். அப்போது குற்றம் சாட்டப்பட்டவன் பார்த்த பார்வையின் அர்த்தம் இருக்கே,

டேய் நீயா இப்படி? என்று புடனியில் அடித்த மாதிரி இருந்தது நேற்று எனக்கு. ஏன் என்று தெரியாமல் நானாக தலை குனிந்தபடியே சமீபத்தில் நடந்த அலுவலக அரசியலில் என்னை குற்றவாளி ஆக்கிய நிகழ்வை நினைத்தேன். chaos தியரி புரிந்த மாதிரி இருந்தது....

No comments: