Tuesday, June 10, 2008

மெட்ராஸ் டு பாண்டிச்சேரி

எனக்கே அதிசயமா இருந்துச்சு, என்னடா நம்ம அலுவலகத்துல நம்ம குழு வெளிய சுத்த பிளான் போட்டு அதும் நடக்குதான்னு. எங்கள் அலுவலகத்தில் உட்கட்சி பூசல்களுக்கு பெயர் போன குழு எங்களுடையது. குழு ஆரம்பித்த முதல் இருந்தவன் என்ற முறையில் இந்த திட்டம் நிச்சயம் நடக்கணும் என்றால் அதற்கு கடவுள் புண்ணியம் வேண்டும் என்று நினைத்திருந்தேன். கடவும் புண்ணியம் நிறைய உள்ளது போல. ஒரு மாதத்திற்கு முன் திடீரென்று நம் அருகில்லுள்ள இடத்திற்கு சென்று வரலாம் என்று மீட்டிங் போட்டார்கள், அந்த மீட்டிங் லட்சணம் வழக்கம் போல எதையோ பேச வந்து எதையோ பேசி எங்கோ போனது, சரி இவங்க கிளம்பின மாதிரித்தான் என்று நினைத்து நீங்கள் எங்கு போனாலும் எனக்கு சம்மதம் என்று சொல்லி வெளிநடப்பு செய்தேன்.

அப்புறம் அது கோனே நீர்வீழ்ச்சி என்று முடிவு செய்யப்பட்டு அதற்கு எப்படி போவது என்று ஒரு வாரம் பேச்சு நடந்தது.(இரயிலா இல்லை பேருந்தா என்று பட்டிமன்றம் நடத்தாத குறை தான்) . நீங்க முடிவு பண்ணுங்க என்று விடுமுறையில் கிளம்பினேன், வருவதற்குள் பாண்டிச்சேரி என்று முடிவெடுத்து வேலை பாதி முடித்தாயிற்று. ( ஏண்டா உங்களுக்கு வெளிய போகணும் போய் தண்ணி அடிக்கனும்னா அதுக்கு தனிய போய்ட்டு வர வேண்டியது தான, எதுக்குடா இப்படி ஒரு பேர் வச்சு ஏற்கனவே முடிவு பன்னின எடத்துக்கு போகணும்னு பிளான் போட்டு களுத்தருகறீங்க??? (நமக்கும் பாண்டிக்கும் ஏற்கனவே நேரம் சரி இல்லை, இருந்தும் எல்லா திட்டமும் நடந்தது)

எல்லாம் முடித்து சனிக்கிழமை கிளம்பலாம் என்று திட்டம், அதற்குள் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டது, அதற்கு சனிக்கிழமை பந்த் என்று சொன்னார்கள். நம்ம பசங்க எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவித்து அதே போல கிளம்பினோம். வழக்கம் போல கிளம்புகையில் எங்கடா இன்னும் ஒண்ணும் நடக்கலியே என்று நினைத்தேன். நினைத்து சில நேரத்தில் ஒருவர் ஏறுவதாக சொன்ன இடத்தை மாற்றி புரிந்து கொண்டு ( க்ரோம்பெட் பஸ் ஸ்டாண்ட் க்கு பதிலாக M.I.T கேட் சென்று விட்டோம்), வண்டியை திருப்பி கொண்டு வந்தால்தான் ஆச்சு என்று அடம் பிடித்து வர வைத்தார். சில நேரத்திலேயே இன்னொரு நண்பர் வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டார், ஏங்கடா இன்னும் கிளம்பவே இல்லை அதுக்குள்ள தண்ணி போட்டுட்டு வந்துடீங்களா என்று பார்த்தால், அவர் 2 நாட்கள் முன்ன அடித்த தண்ணி இப்போ வருதாம். 2 மணி நேரத்தை ஓட்டிவிட்டு பின்னர் அவரை கழட்டி விட்டு கிளம்பியது வண்டி, அறை மணி நேரத்தில் நின்றது பின்ன சாப்பிட வேண்டாமா?

சாப்பிட்டு கிளம்பி பாண்டி பொய் சேர மணி 12.30 . எது aurovill ஆம் தியானம் பண்ணுவாங்களாம் அங்க போனாங்க முதல்ல, ஏங்கடா நீங்க பண்ண போறது இது இல்லையேனு நெனச்சு வண்டியிலேயே உட்கார்ந்து இருந்தா, ஒரு மணி நேரம் கழிச்சு வந்தாங்க, இவங்க வந்ததுக்கும் பண்றதுக்கும் சம்பந்தமே இல்ல போங்க.

வண்டி கிளம்பியது அடுத்து சரக்கு வாங்கணுமாம், அன்னிக்கு பந்த் அதனால எல்லா கடையும் பூட்டிடங்க, விடுவங்களா பசங்க ஏற்கனவே ஆர்டர் செஞ்ச இடத்துல போய் வாங்க ஆச்சு ஒரு மணி நேரம். இதுக்கபுரம் இதுக்கப்புறம் தான் சாப்டனும் என்றால் சரக்கு அடிக்கும் முன்னாடி சாப்பிட கூடாதாம், ஏங்கடா எங்கள மனுசனா மதிங்கடா என்று ஒரு நாலு பேர் கதறினோம். எவனும்கண்டுக்கல, side dish வாங்க போனாங்க, அங்க வண்டி ஒரு மணி நேரம் நின்னுச்சு இதுக்கு இடைல பாதி பேர் ஆசிரமம் அப்புறம் எதோ கோவில்னு போய்ட்டு வந்தாங்க. நான் சத்தியமா வண்டிய விட்டு நகரலங்க.

என்னடா இன்னும் அரம்பிகலையேனு பார்த்தா என்ன வச்சுத்தான் ஆரம்பிப்போம்னு நான் மாங்கா வாங்க போன பாத்து நிமிஷம் தான் லேட் னு சொல்லி ஆரம்பிச்சாங்க. நமக்கும் கோவத்துக்கும் தான் ரொம்ப தூரமாச்சே அதான் ரொம்ப கூலா வண்டில உட்கார்ந்தேன், அடுத்து ஆரம்பிச்சுது பாருங்க, நீதான் லேட் பண்ணின நான் தான் பணினேன்னு அடிசுகிட்டாங்க. ஏங்கடா இதெல்லாம் வாங்கின தண்ணி உள்ள போன அப்புறம்தான பண்ணுவீங்க என்று பார்த்தா இப்பவேவானு யோசிச்சா அப்புறம் சொல்றாங்க தண்ணி அடிக்க டைம் இல்லையாம். ஏங்கடா அப்ப எதுக்குடா ஆசிரமம் தியானம்னு சுத்த சொன்னாங்க?

அப்படி இப்படினு எதோ ஒரு தீவு இருக்கு அங்க போலாம்னு சொல்லி அங்க போய் அரை மணிநேரம் ஓட்டி அப்புறம் போய் இறங்கினா மணி 4.30. ஆரம்பிச்சாங்க, கண்டபடி குடிச்சாங்க. மணி 6 ஆச்சு படகு வந்துடும் கிளம்புங்கடானு சொல்லி கிளம்ப வைக்க நாங்க நாலு பெரும் பட்ட பாடு இருக்கே ஐயோ.

அப்புறம் தான் ஆரம்பிச்சது படகுல ஏறும்முன்னாடி ரெண்டு பேர் பிளாட்.தூக்கி போட்டு ஏத்துனா எடுத்தாங்க பாருங்க வாந்தி, மாத்தி மாத்தி எடுகிறாங்க. இதுல ஒருத்தன் அண்ணா நான் உங்க ஜூனியர் என்ன வீடு வரை கொண்டு சேர்ப்பது உங்க பொறுப்புனு பேசறான். ஏண்டா உங்களுக்கு சேவகம் பண்ணத்தான் எங்க வீட்ல பெத்து விற்றுகாங்களா என்று நெனச்சுகிட்டே அவன பார்த்தேன், அவன் இதே டயலாக்க இன்னொருத்தன் கிட்ட சொன்னான். அட போதைல கூட பையன் தெளிவா இருக்கான்னு நெனச்சேன்.

இவங்கள வண்டில கொண்டு வந்து போடறதுக்குள்ள ஐயோ சாமி போதும்டா என்று இருந்தது. இதுல ஒவ்வொருத்தனும் டிசைன் டிசைன் அஹ வாந்தி எடுக்கிறான், உளறல் வேற. வண்டி கிளம்பியது பெரும்போரட்டதுக்கு பிறகு. நிங்க ஒவ்வொருத்தனும் ஜன்னல் வெளியதான் கிடகிறாங்க, வாந்தி எடுக்கணுமாம், டாய் எதுத்த மாதிரி வரவன் தலைய எடுத்துகிட்டு போய்டுவாண்டா!!!. எவனும்கேட்க்கல.. ரொம்ப கடி ஆகி எப்படியோ போங்கடான்னு சொல்லி உட்காந்துட்டேன். வழில 5 தடவ நிறுத்தி வாந்தி எடுத்தாங்க.
வீடு வந்து சேரும்போது மணி 11.... தயவு செஞ்சு குடிகாரங்க கும்பலா போனா நீங்க தனியா போய் மாட்டிக்காதீங்க. நீங்க வீட்ல அப்பா அம்மாக்கு கூட இவ்ளோ பணிவிடை செஞ்சு இருக்க மாட்டீங்க அவ்ளோ செய்ய வச்சுடுவாங்க.

No comments: