Wednesday, June 18, 2008

உணவு நேரத்து யோசனைகள்

மதிய நேரம் வழக்கமான உணவு நேரத்துக்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன, கணினி திரையில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்துவிட்டு பின் வழக்கமான என் வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன்.


வழக்கமாக உணவருந்த உடன் வரும் நண்பன் வந்தான் அருகில் வந்து மற்றொருவன் பெயரை சொல்லி அவன் உணவருந்த கூப்பிடுகிறான் வா செல்லலாம் என்றான். அந்த மற்றொருவனும் நானும் மிக நெருக்கமான நண்பர்கள் என்ற பெயர் அலுவலக சக ஊழியர்களிடம் உண்டு.ஏனோ தெரியவில்லை சமீபகாலமாக இருவரும் பேசிக்கொள்வது இல்லை. மிக திட்டமிட்டோ, அல்லது சண்டையின் காரணமாகவோ ஏற்ப்பட்ட பிரிவு இல்லை, கடைசியாக அவனிடம் பேசியது ஒரு திருமண விழாவிற்கு செல்ல கூப்பிட்ட போதுதான், வருகிறேன் என்று தெரிவித்த அவன் மாலையில் வர இயலாது என்று தெரிவித்தான்.


அடுத்தடுத்த நாட்களில் அவனிடம் பேசும் சூழ்நிலை வரவில்லை பின்னர் ஒரு நாள் அவனை தேடி போகும்போது அவனருகில் இருந்த மற்றுமொரு நண்பன் அவனுடன் வெளியே சென்றதாகவும், அவன் செல்லிடைப்பேசியை மாற்றி புதிதாக வாங்கி விட்டதாகவும் கூறியபின் ஏனோ அவனிடம் போக மனம் ஒவ்வவில்லை (இது தமிழ் வார்த்தையா தெரியவில்லை) பின்னர் அங்கு செல்கையில் அவனிடம் பேசுவது நின்றது, ஏனோ நேற்று கூட மலையில் பேருந்து ஏறும்முன் அனைவரும் இருக்கும்போது கூட அவனாக என்னிடம் ஒரு புன்னகையை சிந்தவில்லை, இவற்றை எல்லாம் எதிர்பார்க்கும் அளவிற்கு என் மனமுமில்லை. என்னை இப்படி மாற்றியமைக்கு அவனிடமிருந்து நான் கற்றுக்கொண்ட அகம்பாவம்தான் காரணம்.


மிகச்சிறந்த நண்பன், என்னிடமிருந்த என்னை மறுபடியும் கொண்டு வர உதவியவன், எதோ அவன் எது செய்தாலும் அதில் காரணம் இருக்கும், இதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்று ஒரு நாள் எனக்கு தெரிய வரலாம் தெரியாமலும் போகலாம் அனால் அதைப்பற்றி நான் கவலைப்படுவதாயில்லை.


இவ்வாறு அவர்கள் இருவரும் உணவருந்த செல்கையில் நான் எதற்கு என்று நினைத்தேன், வழக்கமாக உணவருந்த வருபவனும் இதற்கு முன்னாள் என்னுடன் வந்த ஒரே காரணத்தால் எனக்காக வருவானே அன்றி அவனுக்காக என்னுடன் சாப்பிட வேண்டும் என்று வருவது இல்லை.என்னுள் இருந்த அந்த சுய வெறுப்பு தலை தூக்கியது, மனதை தேற்றிக்கொண்டு செல்ல முற்படும்போது மற்ற இரு நண்பர்களும் அவர்களுடன் செல்ல இருப்பதை அறிந்தேன், மொத்தம் உள்ள நால்வரில் இருவர் என்னிடம் பேசுவதை தவிக்கும் நிலையில் இருப்பவர். என் மனம் அல்லாடியது, வழக்கம்போல அம்மாவிடம் செல்லிடை பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து விட்டு சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசிவிட்டு, அவர்க்கு தெரிகிறது நான் என் மனம் அலைகளிக்கபடுவதால் பேசுகிறேன் என்று அனாலும் நானாக வெளிக்காட்டவில்லை, ஏதும் சொல்லப்போய் நான் திட்டிவிடுவேன் என்று நினைத்து சாதரணமாக பேசி வைத்தார்கள்.


எவ்வளவு பெரிய குற்றவாளி நான், என் மனம் புண்பட்டது என்று அழைத்து அதயும்சொல்லாமல், அவர் மனதை புண்படுத்தி இப்பொது அதைப்பற்றி எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். நான் வராததை நாசுக்காக குறுஞ்செய்தி அனுப்பி தெரிவித்துவிட்டேன். யோசிக்கும்போது என்னிடம் நெருக்கமாக உள்ள அனைவரும் ஒரு கட்டத்தில் என்னை விட்டு வெளியேறுகின்றனர், அதற்கான காரணத்தை அப்போது யோசித்தால் அது என் தவறாக தெரியவில்லை. அனுபவம் தந்த பாடத்தை கற்றபின் யோசிக்கையில் அது முழுக்க முழுக்க நான் செய்த தவறுகளே என்று புரிகிறது,மீண்டும் சென்று ஓட்டிக்கொள்ள மனது மறுக்கிறது, சேர்த்துக்கொள்ள அவர்களும் தயாராக இல்லை.


ஒதுக்கப்படுதலை விட ஒதுக்கப்படுதலை உணர்கின்றபோது மனதில் வலி அதிகரிக்கிறது, அதும் உனக்கென்று அறுதல் படுத்திக்கொள்ள எவரும் இல்லை என நீயே நினைத்து உன்னை தனிமை சிறைக்குள் பூட்டும்போது அது உன்னை ஆக்கிரமிக்கிறது... நாட்கள் செல்ல செல்ல அந்த வழியே பழகி போய் பின்னர் இன்பமாக மாறும் என நான் நினைக்கவே இல்லை. அப்போது இந்த தனிமையை நான் நினைத்துபார்த்த நாட்களை விட அதிகமாக நேசிக்க ஆரம்பித்து விட்டேன்.


தனிமையை ரசிக்கும்போது தான் வாழ்க்கையில் உள்ள அழகை ரசிக்க முடிகிறது, நெடுந்தூர தனிமைப்பயணம், நீண்ட தூர பைக் சவாரி, பேசும் பூக்கள், செல்லமான மீன்கள், நட்பான புத்தகங்கள், கோவத்தை,துயரத்தை பகிர்ந்து கொள்ளும் தலகாணி, இன்னும் எவை எவையோ, எல்லாவற்றையும் தேடி சென்று கொண்டு உள்ளேன் என்று நினைப்பதே அழகாய் இருக்கிறது.


இந்த தேடலில் தோற்று நான் ஒருவேளை மறுபடியும் புதிய நண்பர்கள் உறவினர், சுற்றம் சூழ என்று மாறலாம் அப்படி மாறினாலும் என் தனிமைக்கு எப்போதும் சிரிதுஇடம் குடுப்பதை பற்றிகொண்டிப்பக யோசிப்பேன்.


இது நீங்கள் படித்து மகிழ நான் எழுதவில்லை,நான் எனக்கு தோன்றியதை இருப்பதை நினைத்துக்கொண்டு இல்லாத (வாய்பேச முடியாத) நண்பன்/ நண்பிக்கு சொல்லுவதாக எண்ணி எழுதியுள்ளேன்.

No comments: