Thursday, June 19, 2008

பொறியியல் முதல் வருடம் வகுப்பின் முதல் நாள்

ஆடி அசஞ்சு எல்லோருடன் சேந்து வகுப்புக்கு வந்து சேந்தேன், நண்பன் ஹரி வேறு வகுப்பு, அப்போது தான் கவனித்தேன், வழக்கமாக முதல் வருடம் அனைத்து மாணவர்களையும் கலந்து வகுப்பு பிரிப்பார்கள் பின்னர் இரணம் வருடம் மட்டுமே துறைவாரியாக மாணவர் பிரிந்து செல்வர் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இங்கு முதல் வருடத்திலேயே துறை வாரியாக பிரித்து போட்டிருந்தனர், முதல் நாள் முதல் வேளையிலேயே ஏமாற்றம், பின்னே இருக்காதா இயந்திரவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் அந்த ஒரு வருடத்தில் மட்டுமே மாணவிகளுடன் சேர்ந்து படிக்க முடியும், அந்த ஆவலில் இங்கு வந்தால் ஏமாற்றமே மிஞ்சியது, ஆட்டோமொபைல் துறை மாணவர்கள் மட்டும் சிவில் மாணவர்களுடன் சேர்த்து வகுப்பு. சிவிலில் மாணவிகள் எண்ணிக்கையே அதிகம் எங்கள் வருடத்தில்.

அனைவரும் ஏளனமாக பார்த்தனர், இருந்தாலும் நாங்க மெக்கானிக்கல் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று ஒரு சீன் போட்டு ஓட்டினோம், எங்கள் வகுப்பிலும் 3 பெண்கள் இருந்தனர், அவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும் இருந்தாலும் அவர்கள் பக்கம் திரும்பினால் எங்கள் கெத்து என்ன ஆவது??? (பின்னால ரொம்ப கடல போடராண்டா இவன் என்று பசங்க சொல்ற அளவுக்கு நம்ம வாழ்க்க மாறிப்போச்சு )

சரி அத விடுங்க முதல் நாள் வகுப்பு முடிஞ்சு போச்சு, எல்லோரும் விடுதிக்கு கிளம்பனும், மாலை சிக்கிரமகவே கிளம்பிட்டதால அப்படியே நடந்து போய்க்கிட்டு இருந்தோம், முன்னாள் போன ஒருவன் "டேய் சீனியர்ஸ் உட்கார்ந்து இருக்காங்கடா சத்தம் போடாம அமைதியா வாங்கடா எஸ்கேப் ஆகிடலாம்" என்று சொல்ல எல்லோரும் அமைதியாய் நடந்தோம். திடீரென்று ஒரு சத்தம் " டேய் மணி " எல்லோரும் திரும்பி கத்தியது யாரென்று பார்க்க பார்க்க, அது அடியேன் தான்.

இருந்த சீனியர்சில் ஒருவன் என் நண்பன், கூடவே 14 வருடம் ஒன்றாக படித்து, 12thல கொஞ்சம் என்னைவிட நல்லா படிச்சு உள்ள வந்துட்டான் , நான் ஒரு வருடம் என்னை இம்ப்ருவ் பண்ணிக்கிட்டு வந்திருந்தேன், என்ன இருந்தாலும் நண்பன மறக்க முடியுமா? அதான் சௌன்ட்.... அப்படியே அத்தன பேரையும் அள்ளிக்கிட்டு போனாங்க, அதுல ஒருத்தன் என்னை மிரட்ட, அப்புறம் மணிதான் நம்மள காப்பாத்தினான். நம்மள அப்படியே உக்கார வச்சிட்டு கூட வந்த பசங்கள பிடிச்சானுக, அப்ப எல்லோரும் என்ன பார்த்த பார்வை இருக்கே.....
கருங்காலி எட்டப்பன் மாதிரி உட்க்கார்ந்து முறுக்கு திங்கறான் பாரு என்று சொல்லாமல் சொல்லியது.

2 comments:

Venkatesh Kumaravel said...

உங்களது சங்கமம் போட்டி கதை குறித்த எனது எளிய கருத்துக்களை இங்கே உரைத்திருக்கிறேன். ஒரு முறை வாசித்து பாருங்களேன்.
http://paathasaari.blogspot.com/2009/04/blog-post_01.html

Unknown said...

இந்திய மொழிகளில் முதன் முறையாக.

முதல் இந்திய மின்னணுவியல் தரவுத்தாள் தளம்

தமிழ் தரவுத்தாள் தளம்
www.tamildata.co.cc

First Electronics Engineering Resource in Tamil