Friday, June 13, 2008

TVS 50 யிலிருந்து YAMAHA வரை

கடந்த ஒரு வாரமாக ஆபிசுக்கு வண்டியில் தான் வருகிறேன், ஆறு மாதமாக வண்டி எடுத்தால் வரும் முதுகு வலியுடன் தான் வண்டி ஒட்டிக்கொண்டு இருந்தேன் அந்த வண்டியை வீட்டில் விட்டு அண்ணாவின் பழைய YAMAHA எடுத்து வந்ததால் இப்போது இவ்ளோ சீன்....

அமாங்க எவ்ளோ நாள் தான் வெயிட் பண்ணுவது?? முதன் முதல் வண்டி எங்கள்வீட்டில் அப்பா வாங்கிய TVS 50 தான். அப்போதெல்லாம் வண்டி வாங்குவது பெரிய விஷயம் எங்களுக்கு அதுமில்லாமல் வண்டி எங்களக்கு தேவை இல்லாமல் இருந்தது. பணி முடிந்து வீட்டிற்க்கு வரும்பூது நடுநிசி ஆகி விடுவதால் வண்டி வாங்கினார் என்று பிறகு தெரிந்து கொண்டேன்.
வண்டி வந்த பின்னர் அதில் போவது என்றால் கொண்டாட்டம் தான், நான்தான் வீட்டில் கடைக்குட்டி என்பதால் வண்டியில் முன்னால்தான் நிக்க வைப்பார் அப்பா, வண்டியில் முன்னால் நின்று அல்லது உட்கார்ந்து கொண்டு போவது எவ்வளவு சந்தோசம்.... பின்னால் அண்ணா, முன்னால் நான் என அடிக்கடி வெளியே கூட்டி செல்வார், சினிமா செல்வதென்றால் ரொம்ப கொள்ளை சந்தோசம், எனக்கு ஆங்கில திரைப்படத்தை கண்ணுக்கு காட்டியவர் அப்பாதான்.

தோட்டத்தில் வண்டியுடன் உட்கார்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ இன்னும் அண்ணாவிடம் பத்திரமாக உள்ளது, நான் சிறு வயதில் எடுத்த போட்டோ என்பது அது மட்டுமே, அப்பாவுடன் ஊருக்கு செல்கையில் வண்டி ஓட்ட கற்றுக்கொடுத்தார், முன்னால் உட்கார்ந்து handle bar பிடித்து ஓட்ட வேண்டியது தான் இப்படியே நிறைய நாட்கள் ஓடிக்கொண்டு இருந்தது.

TVS 50 ஐ ஸ்டார்ட் செய்வது மட்டும் எனக்கு வரவே இல்லை, அந்த பெரிய பெடலை சுற்றி அந்த சின்ன கிளச்சை அழுத்தி விட வேண்டும், நான் சைக்கிள் மிதிப்பது போல மிதித்து ஸ்டார்ட் பண்ண முயற்சி பண்ணுவேன், அனால் முடியாது .

அப்பா வந்தால் மட்டுமே வண்டி ஒட்டிய நான் ஒரு நாள் அம்மா ஊரில் ஒரு திருவிழாவில் தெரிந்தவர் வண்டியை எடுத்து வர சொல்லி சாவி கொடுத்தார், நானும் தள்ளிக்கொண்டு வரலாம் என்று தான் நினைத்தேன் அப்படி தள்ளிக்கொண்டு வரும்போது ஸ்டார்ட் பண்ண ட்ரை பண்ணுகையில் ஸ்டார்ட் ஆகிவிட்டது அப்படியே சைக்கிள் ஓட்டுவது மாதிரி ஏறி உடர்ந்து ஒட்டி வந்தேன், அப்போ அம்மா முகத்தில் இருந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பின்னர் இப்படியே எனது வண்டி தொடர்பு எங்கள் TVS 50 யுடன் மட்டுமே இருந்தது, அப்போ எனக்கெல்லாம் gear வைத்த வண்டி ஓட்ட ஆசை ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை, ஒரு நாள் பள்ளியில் பத்தாவது படிக்கையில் நண்பன் ஒருவன் m80 எடுத்து வந்தான், மற்ற நண்பர்கள் ஒட்டி பார்க்கையில் எனக்கும் ஆசை வந்தது, மற்றவர்கள் ஓட்ட தெரிந்து ஒட்டினர் எனக்கோ கேள்வி ஞானம் மட்டுமே. அவன் என்னிடம் இது உன் முறை என்று வண்டியை குடுக்க, ஸ்டார்ட் செய்து gear மாற்றி க்ளட்ச மெதுவா விடனும்னு நிறைய பேர் சொல்லி கேட்டதாலோ இல்ல நிறைய படிச்சு தெரிஞ்சதலோ அப்படியே செஞ்சேன் ஆனா வண்டி ஓரடி முன்னால் சென்று ஆப் ஆச்சு, அஹா நமக்கு ஆப்புதாண்டா என்று நினைத்து மறுபடியும் ட்ரை பண்ணினத்தில் கிளிக் அஹி ஒரு ரவுண்டு சென்று வந்தோம். ரொம்ப மகிழ்ச்சி, எனக்கும் gear வண்டி ஓட்ட தெரியும் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம்ல.

நமக்கு வந்த வாய்ப்பு எல்லாமே gear இல்லாத வண்டியாதான் வந்துச்சு அக்கா வண்டி கூட kinetic honda. ரொம்ப நல்ல வண்டி அது, ஒரு நாள் தெரிந்த ஒருவர் அக்கா வண்டியை எடுத்து சென்று விட நான் அக்காவை கூட்டி சென்று விடுவதர்க்காக அவர் கடையில் சென்று வண்டி சாவியை கேட்டேன், அவர் ஒரு சாவியை குடுத்து கீழே உள்ளது எடுத்துக்கொள் என்று சொல்லி விட்டார். பின்னர்தான் தெரிந்தது அது yamaha RX100 என்று, வண்டி ஓட்ட தெரியாது என்று சொன்னால் அது அசிங்கம் என்று நினைத்து நமக்கு தான் கேள்வி ஞானம் உள்ளதே அதை வைத்து ஓட்டிக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் கிளம்பினேன், வழக்கம் போல ஸ்டார்ட் செய்து கிளம்பினால் ஓரடியில் நின்றது அதுவும் ஒரு வித துள்ளலுடன், மறுபடியும் முயற்சி செய்தால் அப்படியே ஓரடியில் நின்றது இப்படி கஜினி முகமது போல பல தடவை முயற்ச்சி செய்து பின்னர் க்ளச்சை விட்டால்தான ஆப் ஆகும் பிடித்து கொண்டே செல்லலாம் என்று அப்படியே ஓட்டினேன்,


இந்த லட்சணத்தில் வீட்டில் இருந்து அக்காவை மருத்துவமனைக்கு வேற கொண்டு சென்று விட கிளம்பினேன், என்னை நம்பி எப்படி அக்கா உட்கார்ந்தார் என்று தெரிய வில்லை, அவளவு தைரியம் போல, நடுவே எங்கயும்நிர்க்காமல் கொண்டு சென்று விட்டதில் ரொம்ப மகிழ்ச்சி, அக்காவிற்கு இன்று வரை அப்போது எனக்கு வண்டி ஊட்ட தெரியாது என்பது தெரியாது.

அப்படி இப்படின்னு காலேஜ்ல சேந்தாச்சு, அங்க வண்டி வைத்துக்க கூடாது என்ற கட்டளை உள்ளது அதனால் எப்படா முடிப்போம் ஒரு வேலை எதாச்சும் வாங்கி உடனே சம்பளம் வாங்கறதுக்கு முன்னாடியே ஒரு yamaha வங்கிடனும் என்பது ஆசை, பின்ன அதுக்குள்ள அண்ணா ஒரு yamaha வாங்கிடாரே, எங்கள் ஊரில் yamaha வண்டிக்கு கொஞ்சம் மவுசு அதிகம், ஏன் என்று தெரியவில்லை, தெரிந்தவர் கூறவும்.(எந்த ஊர்னு கேட்காதீங்க கரூர் தான் ).இன்னும் மற்ற ஊர்களை விட இங்கு அதிகம் என்னால் பார்க்க முடிகின்றது.

ஆனால் வெளியே வந்து வேலை கிடைத்தவுடன் வண்டி பேச்சு, பழைய வண்டி கூடாது என்று வீட்டில் அனைவரும் கூறி விட்டனர், சரி அண்ணாவிற்கு புது வண்டி எடுத்து குடுத்து விட்டு அண்ணா வண்டி எடுத்துக்கொள்ளலாம் என்றால் அண்ணா மாட்டவே மாட்டேன் என்றார். என்னடா இது என்று அப்படி இப்படி bit அ போட்டு pulsar வாங்கியாச்சு. 3 வருசமா எப்படி எப்படியோ முயற்ச்சி செய்தும் கிடைக்காத அண்ணா வண்டி இப்போது கிடைத்து விட்டது. அய்யா இப்போலாம் அதில் தான் பறக்கிறார்.

முன்னலாம் எதோ ஒரு அசட்டு தைரியத்தில் இப்படி வண்டிய எடுத்து ஓடிடு இபலாம் ஏன் என்னால் ஒரு சின்ன விசயத்தில் கூட முடிவெடுக்க முடியாமல் திணறுகிறேன் என தெரியவில்லை, போருப்ப்பு வந்ததால் என்று நினைக்கிறேன் :(.
என் வண்டியை பற்றி அப்புறம் பார்க்கலாம்....

3 comments:

Anonymous said...

it was like, reflection of the mentality of every boy....

DHANS said...

// it was like, reflection of the mentality of every boy....//

தங்கள் கருத்துக்கு நன்றி,

Anonymous said...

Thanks for writing this.